
இறையருள்-அறிவு பெருகுக!

The Truth Will Make You Free

அன்னாளைப் போல்….
இறைவாக்கு: லூக்கா2:36-38.
36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்.
இறைவாழ்வு:
எண்பத்து நான்கு வயதானாலும்,
இறைப்பணி செய்தார் அன்னா.
கண் செத்து முடும் காலமளவும்,
கருத்தாய் உழைப்பேன் மன்னா.
பெண்ணை மதியா மக்கள் நடுவே,
பெரும்பணி செய்தவர் அன்னா.
உண்மை மட்டும் உரக்கக்கூறி,
உம் பணி செய்வேன் மன்னா!
ஆமென்.

மதிக்க மறந்த மனிதருக்கு!
துறவியாய் வாழ்ந்த துயரைப் போற்றி,
தொண்டு செய்தார் அன்று.
மறதியாய்க்கூட மதிக்கவிலையே,
மன நலமற்றோர் இன்று.
இறைவனாவி இல்லாரிடமே
இப்படி நிகழும் என்று,
பிறவி எடுத்த எவர்க்கும் சொல்வேன்,
பெரும் பணிவோடு நின்று!
-கெர்சோம் செல்லையா.

உருவிய கத்தி!
இறைவாக்கு: லூக்கா 2:33-35
33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
இறைவாழ்வு:
உண்மை ஒழுக்கம் என்பவர் வாழ்வில்
உருவிய கத்தி பாய்கிறதே.
பெண்ணின் பெருமையாகும் மரிமேல்,
பெரிய துன்பம் சாய்கிறதே!
எண்ணிப் பார்த்தால் இவற்றில்கூட
இறையின் அனுமதி தெரிகிறதே.
கண்ணைமூடி ஒப்புக் கொடுப்போம்;
கடவுளின் மீட்பு புரிகிறதே!
ஆமென்.

அமைதி பெறுவீர்!
இறைவாக்கு: லூக்கா 2:27-32.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இறைவாழ்வு:
ஆண்டவர் மீட்பை அறிந்தவர் மட்டும்,
அமைதியை வாழ்வில் பெற்றிடுவார்.
மாண்டவர் இயேசுவை ஏற்காததினால்,
மனதினில் தோல்வி உற்றிடுவார்.
மீண்டவராக உள்ளம் மகிழ,
மீட்பர் இயேசுவை ஏற்றிடுவீர்.
தாண்டிச் செல்லும் புயல்களெல்லாம்;
தாங்கும் அவரைப் போற்றிடுவீர்!
ஆமென்.

ஓர் ஏழையின் ஏக்கம்!
பார்ப்பன பனியா நிறுவனம் வளர,
பரிசளித்தோமா இந்தியா?
தோற்பவர் இங்கே ஏழை எளியர்;
துயரில் தள்ளவே வந்தியா?
ஆர்ப்பரிப்போடு பேசிய வாக்கு,
‘அச்சே தின’த்தைத் தந்தியா?
சேர்ப்பது என்றும் ஏழையர் வாக்கு!
சிறியருக்கிரங்க முந்தையா!
-கெர்சோம் செல்லையா.
இறை காண்போம்!
மெய்யே இறையென்று,
மேதினியில் நாம் சொல்வோம்.
பொய்யும் அதன் விளைவும்,
பொய்த்திடவே, அதை வெல்வோம்.
செய்வது நன்மையென்றால்,
செய்பவர் இறையென்போம்.
ஐயம் இனி வேண்டாம்.
அன்பினில் இறை காண்போம்!
-கெர்சோம் செல்லையா.

இறைவழி!
இருக்கும் இடத்தை ஏதேனாக்கும்
எளிய தொண்டில் இறை பாரும்.
செருக்கும் வெறுப்பும் தீங்குருவாக்கும்.
செய்ய மறுப்பின் குறை தீரும்.
பெருக்கும் ஊற்றாய் அன்பு சுரக்கும்
பெருந் தன்மையே இறையாகும்.
நெருக்கும் தொல்லை தருவோருக்கும்,
நேர்மைப் பரிசே, முறையாகும்!
-கெர்சோம் செல்லையா.

ஆவியர் வழிநடத்தல்
இறைவாக்கு: லூக்கா 2:26-28.
26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில்,
28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
கிறித்துவில் வாழ்வு:
நாளை நடப்பதை நாம் அறியோம்;
நடத்தும் ஆவியர் அறிகின்றார்.
வேளை வருமுன் பணிமுடிக்க,
வேண்டும் வலுவும் தருகின்றார்.
ஏழை என்னால் இயலாது,
என்று எங்கும் கூறாது,
தோழர் ஆவியர் துணை கேட்டு,
தொடர்வோருக்கு அருள்கின்றார்!
ஆமென்.

நற்றமிழை நாம் அழித்தோம்!