அரேமிய மொழியைப் பேசும் அடியார், 

ஆவியில் நிறைந்து எழும்புகிறார். 

பிறமொழி பேசும் பெரும் வரம் பெற்று, 

புறத்தியாரையும் எழுப்புகிறார். 

ஒரேமொழி இணைக்கும் என்கிற கருத்தை, 

உடைத்து இறையே எழும்புகிறார். 

யார் யார், எம்மொழி என்னும் பிரிவினை,

இல்லாதாரையும் எழுப்புகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2).