பன்முறை காட்சிகள் பலருக்கு ஈந்து,
பார்த்தவர் ஐயம் போக்கினார்.
நன்மறை வாக்கும் நயமாய்த் தந்து,
நம்பும் அடியர் ஆக்கினார்.
என் முறை வந்த அந்நாள் இரவில்,
எளியன் இழிவும் நோக்கினார்.
வன்முறை விட்டேன், வழியும் கண்டேன்;
வாடா அன்பில் தூக்கினார்!
(மத்தேயு 28).