மண்ணிலும் விண்ணிலும் மாபெரும் ஆளுமை, 

மனிதனாய் வந்த இறைவனுக்கே. 

விண் தரும் மீட்பை விரைந்தெங்கும் உரைக்க, 

வேண்டும் பல்லின அரவணைப்பே.

எண்ணிப் பணிந்து கழுவினால் வாழ்வார்;

என்றும் இறைவன் இவரிடமே.

கண்ணிமை போன்று காப்பார் இயேசு;

காணும் கண்கள் எவரிடமே?

ஆமென்.

(மத்தேயு 28:18-20).

பன்முறை காட்சிகள் பலருக்கு ஈந்து, 

பார்த்தவர் ஐயம் போக்கினார். 

நன்மறை வாக்கும் நயமாய்த் தந்து, 

நம்பும் அடியர் ஆக்கினார். 

என் முறை வந்த அந்நாள் இரவில், 

எளியன் இழிவும் நோக்கினார்.

வன்முறை விட்டேன், வழியும் கண்டேன்;

வாடா அன்பில் தூக்கினார்!

(மத்தேயு 28).