மதித்தலே மதி!

ஏற்றத் தாழ்வுகள் என்கிற நிலைமை,

எங்கும் இருப்பது நாம் அறிவோம்.

மாற்றார் மதிக்கும் மதியில்லாமை,

மரமாய்க் கனிவது நாம் அறிவோம்.

போற்றற்குரிய இறைமகன் நமக்கு, 

பொழியும் வாக்கும் நாம் அறிவோம். 

நேற்றைய இழிவின் நிழலை இழக்க, 

நிற்பது யார்? நாம் அறியோம்!

-கெர்சோம் செல்லையா.