இறப்பின் பின்னர் என்ன நடக்கும்?
இதையறிந்தவர் யார் இங்கே?
திறப்பின் வாசல் இயேசுவை நோக்கும்;
தெரியும் புது வாழ்வங்கே.
உறக்கம் போல இறப்பு வந்தாலும்,
இருக்கப்போவது இனி எங்கே?
மறக்காதிருப்போம், மாதிரி இயேசு
மன்னவரோடு நாம் அங்கே!
(மத்தேயு 25)
The Truth Will Make You Free
இறப்பின் பின்னர் என்ன நடக்கும்?
இதையறிந்தவர் யார் இங்கே?
திறப்பின் வாசல் இயேசுவை நோக்கும்;
தெரியும் புது வாழ்வங்கே.
உறக்கம் போல இறப்பு வந்தாலும்,
இருக்கப்போவது இனி எங்கே?
மறக்காதிருப்போம், மாதிரி இயேசு
மன்னவரோடு நாம் அங்கே!
(மத்தேயு 25)
கொன்று போட்டால் கேட்பாரில்லை,
கொல்வோம் என்பார் நடுங்கிட,
அன்று தெய்வம் அதிசயம் செய்தார்;
அவர் மகனை உயிர்ப்பித்தார்.
சென்று ஒளிந்த அடியரைத் திருத்த,
செய்தியை மட்டும் சொல்லாது,
தின்று, தெளியத் தொடவும் வைத்தார்;
தெய்வ மகன் மெய்ப்பித்தார்!
(மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20 & 21).
எடுத்து அடக்கம் செய்வதற்கென்று,
எழுந்தார் அரிமத்தி யோசேப்பு.
அடுத்து உள்ள அன்னார் தோட்டம்,
அமைந்திருந்ததும் சிறப்பு.
கொடுத்து நறுமணம் பெற்றவர் அன்று,
குன்றிணை நிக்க தெம்மு.
படுத்து விடுவார் என நினைத்தார்கள்;
பாருங்கள் இறையின் பம்மு!
(யோவான் 19:38-42)
இறுதி மூச்சை யாரிடம் விடுவோம்,
என்று கேட்பவர் யார் இங்கே?
அறுதி வாக்கை ஆண்டவர் கூறும்,
அந்தக் காட்சி பார் அங்கே.
உறுதியாக ஒன்றினை அறிவோம்;
உயிர் ஈகிறார் இறை இங்கே.
மறதி என்றும் கெட்டிட வேண்டாம்;
மனித உயிர் நிறைவங்கே!
( லூக்கா 23:46).
புதிய அரசுக்கு வாழ்த்துகள்!
எப்படி இருந்தார் என்றுநாம் பாரோம்;
இவர் பின்னாலே இருப்பவர் பாரோம்.
இப்பெரு நாட்டை ஆண்டிடும் பொறுப்பு,
இவருக் கீந்த இறை பார்ப்போம்.
நற்பணி செய்து நன்மை தாரோம்;
நாட்டை உயர்த்த நேர்மை தாரோம்;
அப்படி மட்டும் ஆள்வோம் என்றால்,
ஆசி, அருள், என்றுரைப்போம்!
-கெர்சோம் செல்லையா.
காடிக் கசப்பை வாங்கிய இயேசு,
கனியும் வாக்கு, முடிந்தது.
தேடிக் கொண்டு இப்புவி வந்த,
தெய்வப் பணியும் முடிந்தது.
மூடிக் கொண்டு அலகை செல்ல,
முடிக்கும் வாக்கு, முடிந்தது.
ஆடிக்கொண்டு அலைவோர் மீள,
அருளிய திட்டமும் முடிந்தது!
(யோவான் 19:30).
தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,
தாகம் மிகுந்த அவர் கேட்டார்.
அன்னிலை விருப்பு உடல் மெய்க்கெனினும்
ஆய்வோர் இன்று மெய் கண்டார்.
இன்னில மைந்தர் உயிர் நீர் அருந்த,
ஏங்கும் இயேசு நமைக் கேட்டார்.
நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;
நம்முட் கைப்பு பொய் கண்டார்!
(யோவான் 19:28-29).
மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,
மும்மணி நேரமும் காரிருள்.
சான்றோன் சுமக்கும் உலகின் பாவம்,
சான்று பகர்ந்திடும் பேரருள்.
ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,
என்று கேட்பதோ ஏக்கம்;
நான்காம் வாக்கில் நன்கு தெரியும்,
நம்வினை இருள் நீக்கம்!
(மத்தேயு 27:45-46)
அங்கு வந்த பெண்கள் நடுவில்,
அன்னை மரி நிற்பது கண்டு,
தங்க இடமும் தகுந்த வாழ்வும்,
தருகின்ற இயேசு பொழிகிறார்.
பொங்கு சினமாய் வாழ்ந்த யோவான்,
புரிந்து இன்று அன்பு கொண்டு,
எங்கு முள்ள முதியரைப் பேணும்,
ஏற்பாட்டை வழி மொழிகிறார்!
(யோவான் 19:25-27)
தன்னினத்தவரை காப்பதாய் நினைத்து,
தவறிச் செல்வார் நடுவினிலே,
இன்னொரு மனிதர் தொங்குதல் கண்டு,
இரண்டு கள்வரும் நிந்தித்தார்.
அந்நிலை வேளையில் இயேசுவின் வாக்கு,
அவரில் ஒருவரை உணர்த்திடவே,
மன்னனாய் ஏற்கும் பற்றினைக் கொண்டு,
மகிழ விண்ணைச் சந்தித்தார்!
(மத்தேயு 27:44 & லூக்கா 23:39-43)