வந்து தேடிய பெற்றோர் உணரா,

வாய்மொழி சொன்னார், கேட்டீரோ?

தந்தையிறைக்குத் தகுவது செய்தல்,

தம் கடமை, விட மாட்டீரோ?

நொந்து பெற்ற தாய் உள் வைத்தாள்;

நினைவுபடுத்தினேன், ஏற்பீரோ?

இந்த வாழ்க்கை, இறைவனுக்காகும்;

எண்ணார் வாழார், பார்ப்பீரோ?

(லூக்கா 2)

No photo description available.

பன்னிரு ஆண்டுகள் முடிந்தது கண்டு,

படைத்தோன் கோவில் சென்றனர்.

நன்னிறை நல்கிய நன்மைக்கென்று,

நற்பலி செலுத்தி நின்றனர்.

பின்வருவாரென எண்ணிக் கொண்டு,

பெற்றோர் திரும்பி வந்தனர்.

என்னிறை மகனோ அறிஞரின் முன்பு,

எண்ணா அறிவைத் தந்தனர்!

(லூக்கா 2)

May be an image of 3 people

அரசனும் ஆட்சியும் மாறிய பின்னர்,

அவர்கள் திரும்பி வந்தார்கள்.

உரசலும் புரசலும் இல்லா அன்பர்,

என்ற நற்பெயர் தந்தார்கள்.

பருவமும் உருவமும் வளரும் முன்னர்,

பண்பை நிறைத்து ஈந்தார்கள்;

ஒருவரும் அடையா உயர்ந்த அறிவில்,

ஓரிறை கண்டு மீந்தார்கள்!

(லூக்கா 2)

No photo description available.

யாரோ செய்கிற தவற்றால் இன்று,

எத்தனைபேர் உயிர் துறக்கிறார்.

போரோ, கொலையோ அமைதி தராது,

புரிந்தவர் இவற்றை வெறுக்கிறார்.

ஏரோ தரசன் படை விடு முன்பு,

இறைமகன் எகிப்து செல்கிறார்.

நாராய்க் கிழியும் நிலையிலும் கூட,

நம்பி நடப்பவர் வெல்கிறார்!

(மத்தேயு 2)

May be an image of York Minster

அறிஞர் திரும்பி வராதது கண்டு,

அரசன் வெறியில் துடிக்கிறான். 

சிறுவர் பலரில்  ஐயம் கொண்டு, 

சினத்தில் கொன்று முடிக்கிறான். 

வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு; 

வாழ நினைப்போன் படிக்கிறான்.

புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;

புரியா ஏரொது வெடிக்கிறான்!

(மத்தேயு 2).

விட்டிடு கொடுமை!

விட்டிடு கொடுமை!

ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;

ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.

யாரைக் காக்க இவரைக் கொன்றார்?

இல்லை நற்பதில், தராது சென்றார்.

போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர். 

புரிதல்  பெற்று, இணையப் பாரீர்.

நீரை வடிக்கும்  குடும்பமும் பாரீர்.

நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!

-கெர்சோம் செல்லையா. 

வந்தவர் எத்தனை பேரென அறியோம்;

வணங்கி, பொற்பொருள் தருகிறார்.

தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,

தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.

முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,

முழுமையாக நமைத் தருவோம்.

இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;

இனிய புதுவழிப் பேறுறுவோம்!

(மத்தேயு 2)

May be an image of 2 people

பிறந்த செய்தி முதலில் கேட்டார்,

பிறரால் ஒடுக்கப் பட்டவரே.

திறந்த வெளியில் மந்தை காக்கும்,

தீட்டுத் தொழிலால் கெட்டவரே!

உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,

உண்மையின்றித் தீட்டென்பார்.

நிறைந்த அறிவால் நமை நடத்தும்,

நேரிறையோ நற் கூட்டென்பார்!

(லூக்கா 2: 8-12).

May be an image of lamb, sheep and text

நம்மை  விடவும் நான்கு கற்றார்,

நன்றாய் ஆய்ந்து அறியினும்,

தம்மை மீட்பார் தன்மை அறியார்;

தவறி அரண்மனை போகிறார்.

செம்மை அறிவு பிறகு பெற்றார் 

செல்ல வாக்கு உரைப்பரும்,

பொம்மை போல போகாதிருந்தார்;

புறக்கணிப்பால் நோகிறார்!

(மத்தேயு 2)

ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் நிறைவை யார்தான் விடுவார்?

வையம் இறங்கும் ஏதென்ன?

நான் என்கிறத் தீமை கொள்ளும்,

நாட்டவர் மீள வழியென்ன? 

தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;

தவறா இறை மொழியென்ன?

(யோவான் 3:16}.