துன்பங்கள் ஏற்று அருட்பணி செய்தோர்,
தொலைவுப் பயணம் செல்கிறார்.
நன்னிலம் மட்டுமே கனி தரும் என்று,
நாடுகள் திருந்தச் சொல்கிறார்.
அன்னியர் என்று இதுவரை வைதோர்,
அன்பில் புத்துரு கொள்கிறார்.
என்னிலமாயினும் இறைக்கு ஒன்று;
இயேசு அன்பாய் வெல்கிறார்!
(திருத்தூதர் பணிகள் 8)