நீங்களும் நானும் வேண்டிடும் வேளை,
நிலத்தில் வேர்வை வடிந்ததுண்டோ?
தாங்கிடும் இறையின் மகன் மன்றாட,
தரையில் குருதி வடிந்திடுதே.
ஏங்கிடும் மக்கள் நோக்கிடும் நாளை,
இன்றே கொணர முடிந்ததுண்டோ?
வாங்கிடும் அருளால் யாவும் கூடும்.
வருவோர் துன்பும் முடிந்திடுதே!
(லூக்கா 22:44).