எழுபத்தி ஆறு பிறக்கிறது!
எழுபத்தி ஐந்து ஆண்டுகள் முடித்து,
இன்னொரு நாளும் காணுகிறேன்.
இழுப்பார் விருப்பை நானும் எடுத்து,
இயங்கியதால் வழி கோணுகிறேன்.
பழுத்தவன் எனினும், பழியும் பிடித்து,
படைத்தவர் முன்பு நாணுகிறேன்.
அழைக்கும் இயேசு, நீட்டிக் கொடுத்து,
ஆளுவதால், அன்பு பூணுகிறேன்!
-கெர்சோம் செல்லையா.