தன்னினத்தவரை காப்பதாய் நினைத்து,
தவறிச் செல்வார் நடுவினிலே,
இன்னொரு மனிதர் தொங்குதல் கண்டு,
இரண்டு கள்வரும் நிந்தித்தார்.
அந்நிலை வேளையில் இயேசுவின் வாக்கு,
அவரில் ஒருவரை உணர்த்திடவே,
மன்னனாய் ஏற்கும் பற்றினைக் கொண்டு,
மகிழ விண்ணைச் சந்தித்தார்!
(மத்தேயு 27:44 & லூக்கா 23:39-43)