எழும்பி நின்ற அடியவர் நடுவே, 

இறை வாக்களித்தார் பேதுரு.

குழம்பி நின்றவர் தெளிவு பெறவே, 

கிறித்து நல்கிய புத்துரு.

அழுக்குணந்தவர் உளம் திருந்தவே, 

அளித்தார் அந்நாள் முழுக்கு. 

இழுக்கு துறந்தார் பத்து முன்னூறு;

இதுவே திரு அவை, விளக்கு!

(திருத்தூதர் பணிகள் 2).