எழும்பி நின்ற அடியவர் நடுவே,
இறை வாக்களித்தார் பேதுரு.
குழம்பி நின்றவர் தெளிவு பெறவே,
கிறித்து நல்கிய புத்துரு.
அழுக்குணந்தவர் உளம் திருந்தவே,
அளித்தார் அந்நாள் முழுக்கு.
இழுக்கு துறந்தார் பத்து முன்னூறு;
இதுவே திரு அவை, விளக்கு!
(திருத்தூதர் பணிகள் 2).