உயிர்த்தார் இயேசு என்றே உரைத்து,

உயிரும் ஈந்தார் அந்நாளில்.

வயிற்றால் வாழ்ந்து, வஞ்சிப்போரே

வளருகின்றார் இந்நாளில்.

கயிற்றால் கட்டப் பட்டிருப்பாரை

கரை சேர்ப்பது எந்நாளில்? 

பயின்றார், மறந்தார் என்றில்லாமல், 

படைத்து, பணிகிற நன்னாளில்!

(திருத்தூதர் பணிகள் 5, 6 & 7)

புழு!

புழு!

மண்ணில் உழலும் புழுவைக் கண்டு, 

மனித பெருமை அகலக் கண்டேன்.

கண்ணில் காணும் அப்புழு உண்டு,

கால் நீட்டும் தவளையும் கண்டேன்.

அந்த தவளையை விழுங்கிக் கொண்டு,

அடி வாங்கும் பாம்பும் கண்டேன்.

இந்த பெருமை புகழ் தூள் துண்டு!

இவனை உண்ணும் புழு கண்டேன்!

-கெர்சோம் செல்லையா.