உயிர்த்தார் இயேசு என்றே உரைத்து,
உயிரும் ஈந்தார் அந்நாளில்.
வயிற்றால் வாழ்ந்து, வஞ்சிப்போரே
வளருகின்றார் இந்நாளில்.
கயிற்றால் கட்டப் பட்டிருப்பாரை
கரை சேர்ப்பது எந்நாளில்?
பயின்றார், மறந்தார் என்றில்லாமல்,
படைத்து, பணிகிற நன்னாளில்!
(திருத்தூதர் பணிகள் 5, 6 & 7)