நீதி நேர்மை அளந்து பார்க்கின்,

நிறை குறைந்து இருக்கிறோம்.

பாதி அளவும் தாண்டாதவராய்,

பரிதவிப்பைப் பெருக்கிறோம்.

ஆதி இறைதான் நேர்மை நிறைவு;

அவர்முன் எப்படி நிற்கிறோம்?

பீதி வேண்டாம், பிடிக்கும் பற்றால்,

பேரருள் மீட்பு பெறுகிறோம்!

(உரோமர் 3)