ஒரு முட்டாளின் அறிவு!

முட்டாளாய் பிறந்து, முட்டாளாய் பறந்து,

முழு அறிஞனாக நான் நடிக்கிறேன்.

கெட்டாளாய் மலர்ந்து கெட்டாளாய் உலர்ந்து, 

கெடுப்பேன் எனத்தான் வெடிக்கிறேன்.

தொட்டாள்வேன் இன்று, தூய்மைக்கே என்று;

தொடங்கும் அறிவிறை பிடிக்கிறேன்.

மட்டாகா மகிழ்ச்சி, மடமையின் வீழ்ச்சி;

மண் தருமோ? உரை முடிக்கிறேன்!

–கெர்சோம் செல்லையா.