ஒரு முட்டாளின் அறிவு!
முட்டாளாய் பிறந்து, முட்டாளாய் பறந்து,
முழு அறிஞனாக நான் நடிக்கிறேன்.
கெட்டாளாய் மலர்ந்து கெட்டாளாய் உலர்ந்து,
கெடுப்பேன் எனத்தான் வெடிக்கிறேன்.
தொட்டாள்வேன் இன்று, தூய்மைக்கே என்று;
தொடங்கும் அறிவிறை பிடிக்கிறேன்.
மட்டாகா மகிழ்ச்சி, மடமையின் வீழ்ச்சி;
மண் தருமோ? உரை முடிக்கிறேன்!
–கெர்சோம் செல்லையா.