பன்னிரு அடிகளும், பற்றுள்ளோர்களும், 

பாங்காய் இணைந்து வேண்டுகையில்,

சொன்ன தம் வாக்கை நிறைவேற்றிடவே,

தெய்வம் ஆவியர் ஆகிறார்.

அன்னிறை நாளும், ஐம்பதென்றிருக்க,

அவை பிறந்துத் தோன்றுகையில், 

என்னிலத்தோர்களும், இயேசுவில் ஒன்று,

என்று இறையும் ஏகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2.1-47)