தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,
தாகம் மிகுந்த இயேசு கேட்டார்.
அன்னிலை விருப்பு உடலுக்கெனினும்,
ஆய்வோர் இன்று அறிவு கண்டார்.
இன்னில மாந்தர்கள் உயிர் நீர் அருந்த,
ஏங்கும் இயேசு நம்மையும் கேட்டார்.
நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;
நைய, வாழ்வில் கைப்பு கொண்டார்!
(யோவான் 19:28-29).