ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?

ஆண்டு முடித்த அரசரா? அவதிப்படும் மனிதரா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:32-38.

32 தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34 யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35 நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36 சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37 லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38 ஏனோஸ் சேத்தின குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

கிறித்துவில் வாழ்வு:
ஆண்டு முடித்த அரசரைப் பாடி,
அறிக்கையாக்கினால், வரலாறு.
மாண்டு போகும் மக்களை நாடி,
மதிப்புரை எழுதுவார் நமில் யாரு?
வேண்டுகின்றோர் விடுதலையாக,
விண்வழி காட்டும் ஏடேது?
தோண்டுகின்றோர் தூய்மையாவார்;
தோல்வி என்பது கிடையாது!
ஆமென்.

Image may contain: text
Comments

காட்டு வெள்ளம் கற்பித்தாலும்!

காட்டு வெள்ளம் கற்பித்தாலும்!

தீட்டு என்று தள்ளப்பட்டோர்,
தெய்வம் போன்று ஆகின்றார்.
ஆட்டுவிக்கும் சாதி வெறியர்,
அறிவை இழந்து சாகின்றார்.
காட்டு வெள்ளம் கற்பித்தாலும்,
கற்கவில்லை, வெறி நெஞ்சம்.
கூட்டு வாழ்க்கை, கோடி இன்பம்.
கொடியோருக்கு, இறை கெஞ்சும்!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person

தந்தையின் தாத்தா பெயர் என்ன?

தந்தையின் தாத்தா பெயர் என்ன?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:23-31.

23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24 ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25 யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26 நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27 யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28 நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29 யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.

கிறித்துவில் வாழ்வு:
தந்தையின் தாத்தா பெயரைக் கேட்டால்,
தடுமாறுகிறார் நம் வீட்டார்.
முந்தையர் பெயரை மறவாதுரைப்பார்,
முதற்கனி என்னும் அந்நாட்டார்.
எந்தையர் இயம்பியச் செய்தியைச் சொன்னால்,
யாரின்று கேட்பார் வரலாறு?
வந்தவர் போனார், என்றில்லாமல்,
வாழ்ந்தவர் செய்ததை நீ கூறு!
ஆமென்.

Image may contain: sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

விண்ணின் குரல்!

விண்ணின் குரல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:21-22.
21 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

கிறித்துவில் வாழ்வு:
எதைக் கேட்க விரும்புகிறாய்?
எப்படிக் காதைத் திருப்புகிறாய்?
உதை பந்தாய் ஓடுகிறாய்;
ஒன்றுமின்றி வாடுகிறாய்.
விதை போன்றது இறை வாக்கு.
விரும்பி நெஞ்சில் நீ வாங்கு.
கதையாகும் உன் வாழ்க்கை;
கனிய வைக்கும் நம்பிக்கை!
ஆமென்.

No automatic alt text available.

கேரள வெள்ளம்

வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.

– கெர்சோம் செல்லையா.

Image may contain: text
 கேரள வெள்ளம்

எவ்வழி தலைவன்?

எவ்வழி தலைவன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:19-20.
19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டபோது,
20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:
எவ்வழி தலைவர் செல்கின்றாரோ,
அவ்வழிதானே தொண்டரும் செல்வர்.
செவ்வழி எதுவென அறியாத் தலைவர்,
சேர்க்கும் இடமோ படுகுழி, சொல்வர்!
இவ்வகைத் தலைவர்கள் இருப்பதனால்தான்,
இன்று நம்நாட்டில் எதற்கும் பஞ்சம்.
ஒவ்வொரு மனிதரும் இதனைப் புரிந்தால்,
ஒழுகும் ஆறாய் ஒழுக்கம் மிஞ்சும்!
ஆமென்.

Image may contain: one or more people, shoes and text
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
Posts

மறக்காதீர்! இறக்காதீர்!

மறக்காதீர்! இறக்காதீர்!

மார்வாடி செட்டியர் வர்த்தகம்போல்,
மக்கள் ஆட்சி நடக்குமெனில்,
ஏர்வாடி மனநலக் காப்பகங்கள்,
இங்கே பெருகும்; மறக்காதீர்!
போராடி அழுவோர் உரிமைகளைப்
புரியும் அரசு இருக்குமெனில்,
சீராடி உயரும் நம் வாழ்வு;
சிறியரைத் தாழ இறக்காதீர்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, standing
LikeShow More Reactions

Comment

வெளியே தெரியா வெறி!

வெளியே தெரியா வெறி!

வெளியே சிரித்து, உள்ளே மறைத்து,
வெறித்தனம் கொள்ளும் ஒருகூட்டம்.
தெளிவாய்த் திட்டம் தீட்டுவதாலும்,
தெரியாதிருக்கும் இவ்வட்டம்.
எளிதாய் எவரும் அறியாதிருக்க,
இவர்களுக்கிருக்கும் பல பட்டம்.
புளியாம் இவரை இனிக்க வைக்க,
புரிவோம் அன்பின் திருச்சட்டம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

Comments

ஏழையின் நல்லுயர்வே!

ஏழையின் நல்லுயர்வே!

ஐந்தினைக் கொடுத்து ஐநூறெடுக்கும்,
அரசியல் வித்தகரே,
மந்தைகள்போன்று, மக்களை விற்கும்,
மாபெரும் வர்த்தகரே,
விந்தைகள் புரிந்து, வங்கிகள் ஏய்க்கும்
வேந்தர்கள் நல்லுறவே,
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது,
ஏழையின் நல்லுயர்வே.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

திருவட்டாறு

திருவட்டாறே!

வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: sky, mountain, bridge, outdoor and nature