வான் பறக்க முயன்ற ஊர்தி,
வந்து வீழ்ந்தது அதிர்ச்சி.
தரை முட்டிய முயற்சி.
ஏன் இழந்தோம் என்று கேட்க,
ஏற்ற பதில் இலையே.
நான் இருக்க இவர் பறக்க,
நடைபயணம் வலியே !
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
அறிஞர் திரும்பி வராதது கண்டு,
அரசன் வெறியில் துடிக்கிறான்.
சிறுவர் பலரில் ஐயம் கொண்டு,
சினத்தில் கொன்று முடிக்கிறான்.
வறிஞர் என்பார் அறிவிலும் உண்டு;
வாழ நினைப்போன் படிக்கிறான்.
புரிவாய் நண்பா, புனிதத் தொண்டு;
புரியா ஏரொது வெடிக்கிறான்!
(மத்தேயு 2).