முன்னர் வந்த இறை வாங்கினர்கள்,
இன்னிலம் மீட்க, இறைமொழிந்தாரென,
எழுதிய வாக்கியம் சேருங்கள்.
தன்னைத் தாழ்த்தும் மைந்தன் வாக்கின்,
தன்மையை பகுத்துப் பாருங்கள்.
என்னிலத்தார்களும் இதுவரை அறியா,
இயேசுவின் ஆளுமை சேருங்கள்!
(மத்தேயு :5-7)
The Truth Will Make You Free
எந்த மலையென யானும் அறியேன்;
இயேசு அமர்ந்து பொழிகிறார்.
தந்தை இறையின் அரசிற்கழைத்து,
தாழ்மை நாடி மொழிகிறார்.
இந்த நாளிலும் இதுபோற் செய்தி,
இல்லை என்றே சொல்கிறார்.
நைந்த நெஞ்சும் செம்மையாகும்,
நேர்வழி வந்தோர் வெல்கிறார்!
(மத்தேயு: 5-7)