அழிக்கும் தூதன் அனைத்தும் அழிக்க,
அவன் கை படாது தப்பிட,
பலிக்கும் இறை சொல் விடாது கேட்டு,
பலி ஆடடித்தது இசரயெல்.
உலுக்கும் கூக்குரல் ஊர்களில் ஒலிக்க,
இழுக்கும் நெஞ்சில் இரக்கம் தொட்டு
இணைத்தால் நாமும் இசரயெல்!
(விடுதலைப் பயணம்:12)

The Truth Will Make You Free
இருபது முப்பது இலகாரத்தில்,
இறையின் மக்கள் வளரவே,
அருவருப்பாக எகிப்தியர் கண்டு,
ஒருவரும் எவ்வித பயன் பெறாமல்,
ஊழியம் செய்து தளரவே,
தருகிற பொருளியல் பேறு கொண்டு,
தம்மினத்தையும் தூக்கினர்!
பிறரை வதைத்து, பெரு மேடெழுப்பி,
பிரமிட் என்பதாய் விளிக்கிறார்.
குறை காணாத பல பேர் எழும்பி,
கோபுர அழகிலும் களிக்கிறார்.
பறை அறிவிக்கும் பற்பல நூலை,
பண்பாடென்றும் தொகுக்கிறார்.
இறையோ பெரு மூச்சை நினைத்து,
ஏழைக்கு வழி வகுக்கிறார்!
