நாட்டை நினைத்து நன்மை செய்யும்
நல்ல தலைவர் நாடுகிறோம்.
கோட்டை விட்டச் சிலரைக் கண்டும்,
குறுகி நெஞ்சம் வாடுகிறோம்.
ஏட்டை எடுத்து இறை சொல் கேட்டு,
எவரும் உண்டோ, தேடிடுவோம்.
ஆட்டை மேய்த்த தாவிது கண்டு,
அவரது புகழ் பாடிடுவோம்!
(2 சாமுவேல் 2-5:-5).

The Truth Will Make You Free
தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).

தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).
