நல்லிறை வாக்கை நயமாய்ச் சொல்லி,
நாட்டை நடத்தினாருமுண்டு.
சொல்லிய வாக்கை நடித்துக் காட்டி,
எல்லாக் காலமும் அழியாதிருக்க,
எழுதி வைத்தாருமுண்டு.
கொல்ல வந்தார், கொள்ளாதிருக்க,
குகையில் காத்தாருமுண்டு!
(ஏசாயா 20, எரேமியா 13 & எசேக்கியேல் 4)

e
The Truth Will Make You Free
ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,
உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.
செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,
சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.
அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;
அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.
எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;
இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!
(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)
