எலியா என்கிற இறைவாக்கினரை,
எண்ணிப் பார்க்கும் வேளையில்,
வலிதாய் இருக்கும் அவரது பற்றை,
பலியாக்குகிற வெறியை மட்டும்,
பற்றிட வேண்டாம் என்கையில்,
தெளிவாய் தெய்வம் பேசுவதாயும்,
திருமறை ஆழம் தோண்டுவோம்!
(1 அரசர்கள் 17:1 – 2 அரசர்கள் 2:14).

The Truth Will Make You Free
ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,
உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.
செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,
சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.
அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;
அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.
எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;
இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!
(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)
