தன்பணி முடிக்கும் நேரம் நெருங்க,

தாகம் மிகுந்த இயேசு கேட்டார்.

அன்னிலை  விருப்பு  உடலுக்கெனினும்,

ஆய்வோர் இன்று அறிவு கண்டார்.

இன்னில மாந்தர்கள் உயிர் நீர் அருந்த, 

ஏங்கும் இயேசு நம்மையும் கேட்டார்.

நன்னீர் இல்லார் காடியே கொடுப்பார்;

நைய, வாழ்வில் கைப்பு கொண்டார்! 

(யோவான் 19:28-29).