புதிய அரசுக்கு வாழ்த்துகள்!

எப்படி இருந்தார் என்றுநாம் பாரோம்;

இவர் பின்னாலே இருப்பவர் பாரோம்.

இப்பெரு நாட்டை ஆண்டிடும் பொறுப்பு,

இவருக் கீந்த இறை பார்ப்போம்.

நற்பணி செய்து நன்மை தாரோம்;

நாட்டை உயர்த்த நேர்மை தாரோம்;

அப்படி மட்டும் ஆள்வோம் என்றால்,

ஆசி, அருள், என்றுரைப்போம்!

-கெர்சோம் செல்லையா.