மூன்றாம் வாக்கை மொழிந்த பின்னர்,

மும்மணி நேரமும் காரிருள்.

சான்றோன் சுமக்கும் உலகின் பாவம், 

சான்று பகர்ந்திடும் பேரருள்.

ஏன்தான் இறையே ஏன்தான் இறையே,

என்று கேட்பதோ ஏக்கம்;

நான்காம் வாக்கில் நன்கு தெரியும், 

நம்வினை இருள் நீக்கம்!

(மத்தேயு 27:45-46)