மரியின் அச்சம்!

மரியின் அச்சம்!
கிறித்துவின் வாக்கு:லூக்கா1:30.

30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.

கிறித்துவில் வாழ்வு:
கன்னி ஒருத்தி கருவுற்றாள் எனில்,
காண்போர் பழிக்கும் காலமது.
அன்னை மரியும் அதனை நினைத்து,
அச்சம் கொள்வதில் தவறேது?
என்றபோதிலும் இறைவிருப்பிற்கு,
ஈந்தளித்தல் காணும்போது,
முன்பு நிற்கத் தகுதியில்லை;
என்றுணர்ந்தேன், உண்மையேயிது!
ஆமென்.

Image may contain: 1 person

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்து!

அரசியல், சமுக வீழ்ச்சிகளால்,
அடிமை ஆனோம் அன்னாளில்.

இரக்கம் இல்லா ஆட்சிகளால்,
ஏற்றமும் காணோம் இன்னாளில்.

முரடர், திருடர் நீக்கிவைத்தால்,
முன்னேறிடுவோம் பின்னாளில்.

உரக்கக் கூறியும் போக்குரைத்தால்,
உமக்கு விடுதலை என்னாளில்?

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and close-up

நல்லவரேசு எனது கோனார்!

நல்லவரேசு எனது கோனார்!

உண்மையுள்ள நண்பன் வேண்டும்,
உயிராயிருந்து ஒளியைத் தூண்டும்.

எண்ணி நானும் தேடிச் சென்றேன்;
எவருமில்லை, வாடி நின்றேன்.

கண்ணில் பாயும் ஆறு கண்டார்;
கடவுள் இரங்கி, ஆட்கொண்டார்.

நண்பனாகி இலக்கணம் ஆனார்;
நல்லவரேசு எனது கோனார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text and nature

யார் தந்தார் விடுதலை?

யார் தந்தார் விடுதலை?

யார் இவர் என்று தெரியவில்லை;
இவரது எண்ணமும் புரியவில்லை.

நேர்மையாக நாம் நோக்கின்,
நிகழ்ந்தவை உண்மை, வேறில்லை

பார், இதோ விடுதலை என்றவர்கள்,
பசித்தவருக்குத் தரவில்லை.

தேர்தலில் வென்று சென்றவர்கள்,
தொண்டு செய்யவே வரவில்லை!

-கெர்சோம் செல்லையா.

-3:45

524,699 Views

ஆய்வோம் இறைவாக்கை!

எண்ணி ஆய்வோம் இறைவாக்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா:1:29
29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

கிறித்துவில் வாழ்வு:
வாக்கின் விளக்கம் புரியாமல்,
வருத்தம் கொள்வோர் நாமென்றால்,
நோக்கிப் பார்ப்போம் மரியாளை,
நொடியில் கலக்கம் நீங்கி விடும்.
ஏக்கம் எதுவும் கொள்ளாமல்,
இறையின் வாக்கை ஆய்ந்திட்டால்,
தாக்கும் வருத்தம் தவிடாகும்;
தருவார் வாழ்த்து, வாங்கி எடும்!
ஆமென்.

No automatic alt text available.

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!

இறைவனின் மகனைப் பெற்றிடும் பேறு!
இறைவாக்கு: லூக்கா 1;26-28.
26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.

இறைவாழ்வு:
மறைவழி வாழும் மாண்பு கொண்டோர்,
மாநிலத்தில் இன்று அரிதாகும்.
இறைவனும் இவரில் மகனாய்ப் பிறத்தல்,
எல்லா அரிதிலும் பெரிதாகும்.
குறையுள்ள நம்மில் நிறைவாய் வாழ்ந்து,
கொடுத்து வைத்தவர் மரியாகும்.
அறைந்திடும் ஆணியாகவே சொல்வேன்,
ஆண்டவர் தேர்வே சரியாகும்!
ஆமென்.

Image may contain: one or more people, wedding, outdoor and nature

எந்தனின் காட்டில் எருமை!

முந்திரித் தோட்டம் அழிக்கும் விலங்கை
முதற்கண் பிடிப்பார் ஆர்வலர்.
எந்தனின் காட்டில் எருமை பிடித்தால்,
என்னைப் பிடிப்பார் காவலர்.
தந்திரமாகப் பிடித்து விற்பார்,
தவற்றைச் செய்யும் வேட்டையர்.
வந்தவை யாவும் நன்மை என்று,
வாழ்த்திச் செல்வார், நாட்டையர்!
-கெர்சோம் செல்லையா.

Image may contain: tree, outdoor and nature

ஐயமுற்றவர் மனைவி எனினும்!

ஐயமுற்றவர் மனைவி எனினும்!
இறைவாக்கு: லூக்கா 1:24-25.

24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.

இறைவாழ்வு:

ஐயமுற்றவர் மனைவி என்றாலும்,
ஆண்டவர் அருள்தர மறுக்கவில்லை.
கையறு நிலையில் விழுபவர் எனினும்,
கனிந்து தாங்கவும் மறக்கவில்லை.
மெய்மையில்லாத ஊழியர் கண்டும்,
மேன்மை அளிக்கவும் குறைக்கவில்லை!
பொய்யென்று நானும் நம்பாதிருந்தேன்.
புனிதர் எனையும் வெறுக்கவில்லை!
ஆமென்.

Image may contain: text

நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!

நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:21-23.

21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.

கிறித்துவில் வாழ்வு:
நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்;
நற்செய்தியன்றி அவர் பாடார்.
கும்பிடும் கையில் பொருள் நாடார்;
கோடி கொடுப்பினும் பின் ஓடார்.
வம்பும் வாதும் இனி கேளார்;
வாய்மையற்றோர் முன் தாழார்.
அம்புகள்வரினும் அவர் மாளார்;
அவரை வெறுப்பவர்தான் வாழார்!
ஆமென்.

Image may contain: text
Gershom Chelliah

எப்படி நடக்கும்?

எப்படி நடக்கும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:18-20.
18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி நடக்கக் கூடும் என்று,
இறைவாக்கினை நாம் புறக்கணித்தோம்.
இப்படி எத்தனை பயன்களிழந்தோம்;
எண்ணிப் பார்த்து அரவணைப்போம்.
தப்பிதம் எதுவும் பற்றினில் வேண்டாம்;
தந்தை இறையை நம்பிடுவோம்.
அப்படி வரினும், அவைகள் ஒழியும்;
ஆண்டவர் வழியில் கும்பிடுவோம்!
ஆமென்.

Image may contain: cloud, text and nature