என்னோக்கும் இல்லாமல்….

என்னோக்கும் இல்லாமல்….
இறைவாக்கு: லூக்கா:1:67-75.
67அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
71உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
74தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
75தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.

இறைவாழ்வு:
என்னோக்கும் இல்லாமல்,
எத்தனை நாள் தானலைவீர்?
பின்னோக்கிப் போனதனால்,
பேரிடர்களில் விழுந்தீர்.
நன்னோக்கில் நலமடைய,
நாடுங்கள் இறைவனை நீர்.
முன்னோர்க்கு உரைத்தபடி,
முழுமை மீட்படைவீர்!
ஆமென்.

Image may contain: 2 people
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…

வெறுப்பு, வெறுப்பு!

வெறுப்பு, வெறுப்பு!

வெறுப்பை விதையாக்கி,
வீடுகளில் நட்டிட்டோம்.
விளைச்சல் பெருகிடவே,
வீதியிலும் கொட்டிட்டோம்.
பொறுப்பை உணராமல்,
பொல்லாங்கைக் கட்டிட்டோம்;
போதும் பொய்வாழ்க்கை;
புனிதனைத் தொட்டிடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: plant, flower, text, nature and outdoor
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah
Write a comment…

கட்டவிழ்ந்த நாவுகளே!

கட்டவிழ்ந்த நாவுகளே!

இறை வாக்கு: லூக்கா 1:64-66.
64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.

66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

இறைவாழ்வு:
கட்டப்பட்ட நாவுகள் எல்லாம்,
கடவுள் அருளால் திறக்கட்டுமே.
முட்டாள்த்தன்மை முற்றிலும் விட்டு,
மும்மை இறையில் பிறக்கட்டுமே.
எட்டுத்திக்கில் எழும்பும் தீதும்,
இல்லா வண்ணம் இறக்கட்டுமே.
கொட்டவேண்டும் அன்பு மழையே;
குவலயம் தழைத்துச் சிறக்கட்டுமே!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…

குடியரசு!

குடியரசு நாள் வாழ்த்து!

தனி வாழ்வில் நேர்மையாய் இரார்,
பொதுவாழ்வில் நேர்மையைத் தரார்!
இனி இதனை விதியாக்கிடுவார்,
இந்நாட்டின் நன்மை நோக்கிடுவார்!

-கெர்சோம் செல்லையா

No automatic alt text available.

நன் தமிழ் நாடு!

நன் தமிழ் நாடு!

சேரர் சோழர் பாண்டியர் நாளில்,
சிறப்பாய் வளர்ந்தது செந்தமிழ்நாடு.
ஈரம் இல்லார் வந்ததன் பின்னர்,
இழிவுபட்டது என் தமிழ்நாடு.
நேரம் இல்லார் தமிழ் பேசாததினால்,
நீங்கள் காண்பது வன் தமிழ்நாடு!
ஆரம் சூடி, உம்மைப் பணிவேன்;
அன்பு நண்பா, நன் தமிழ் நாடு!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

காமராசர் கக்கனைப் பார்த்தும்…

புழுகவில்லை!

காமராசர் கக்கனைப் பார்த்தும்,
கதர் ஆடைகள் ஒழுகவில்லை;
கழகம் கண்ட பெரியார் முயன்றும்,
கறுப்புச் சட்டைகள் கழுவவில்லை.
ஆமாம், நல்ல கண்ணு இருந்தும்,
அடிமைகள் அவரைத் தழுவவில்லை.
அப்படிப்பட்ட தமிழ் நாட்டிற்கு,
ஆண்டவரே கதி, புழுகவில்லை!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 3 people, people smiling
LikeShow More Reactions


மண்டு, மண்டு!

இரக்கம் கொண்டவர் இறைவன்!
இறை வாக்கு: லூக்கா 1:59-63.
59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.
61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இறைவாழ்வு:
இரக்கம் கொண்டவர் இறைவன் என்று,
யோவான் பெயரில் கண்டோம் அன்று.
உரக்கச் சொல்வோம் நாமும் இன்று,
இறையின் அருளே வாழ்வில் நன்று.
அரக்கத் தன்மை கொண்டவர் கண்டு,
அதுவே சரியெனச் சொல்பவர் உண்டு.
முரடர் மூடர் கதைகள் கொண்டு,
முடிவு செய்வோர், மண்டு, மண்டு!
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

Comment

பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்…

இறைவாக்கு: லூக்கா 1:56-58.

56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.

இறைவாழ்வு:
பிள்ளையின் பிறப்பு பேரின்பமாகும்;
பெறாதவள் பெற்றால் பெருமகிழ்வாகும்.
உள்ளத்தின் மகிழ்வு உறவிலும் பரவும்;
உறவுகள் வழியாய் ஊரும் மகிழும்.
வெள்ளத்தின் வலிமை பெற்றிருந்தாலும்,
வேண்டும் இறையருள், பிள்ளை பிறக்கும்.
கள்ளத்தின் வாழ்வும் மலடேயாகும்;
கடவுளில் பிறப்போம், களிப்புண்டாகும்!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

அடகு வைக்காதீர்!

அடகு வைக்காதீர்!

ஐந்து காசில் உண்மை அற்றோர்
ஐந்தாயிரத்தை எடாரோ?
சொந்த வாழ்வில் நேர்மை அற்றோர்,
சுவைக்கும் பொதுவில் கெடாரோ?
இந்த நாளின் திரைப்படத்தவரால்,
எத்தனை இழிவு காணீரோ?
செந்தமிழ் நாட்டை அடகு வைக்காதீர்;
சிந்திப்பவரே நாணீரோ?

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

வாருங்கள், வறுமையை ருசித்தவரே!

வறுமையை ருசித்தவரே வாருங்கள்!

காட்சி காணாக் கண்களினால்,
மாட்சி அறிய இயலாதே!
மீட்சி என்பது தெரியாமல்,
ஆட்சி அமைக்க முயலாதே!

நேற்று வறுமை ருசித்தவரே,
மாற்று வழியைத் தருவாரே!
வேற்று மனிதர் தெரியாரே;
தோற்று போகவே வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: table, outdoor and water
LikeShow More Reactions

Comment