என்னிலத்தோர்க்கும் இறைவன் ஒருவன்;
தன்னையேயறியா மானிடன் கேட்பின்,
தருகிற பதில்கள் செப்படியோ?
விண்ணிலிருந்து வந்தவர் மைந்தன்;
விளக்கும் காட்சி காணலையோ?
மண்ணின் மகனே, இயேசுவைப் பார்ப்பாய்;
மனித வடிவிறை தோணலையோ?
(மத்தேயு: 5-7)
The Truth Will Make You Free
எந்த மலையென யானும் அறியேன்;
இயேசு அமர்ந்து பொழிகிறார்.
தந்தை இறையின் அரசிற்கழைத்து,
தாழ்மை நாடி மொழிகிறார்.
இந்த நாளிலும் இதுபோற் செய்தி,
இல்லை என்றே சொல்கிறார்.
நைந்த நெஞ்சும் செம்மையாகும்,
நேர்வழி வந்தோர் வெல்கிறார்!
(மத்தேயு: 5-7)