Category: நற்செய்தி
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..
நற்செய்தி மாலை: மாற்கு 3:20.
“அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.”
நற்செய்தி மாலை:
உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்,
ஊணினை மறந்து உழைப்பவர் யார்?
விண்ணையும் துறந்து, வீதியில் வந்து,
விருந்து படைக்கும் மறைமகனார்.
பண்பிலார் நடுவில் வாழும் நம்மை,
பரிவாய் விருந்திற்கழைப்பவர் யார்?
எண்ணிட இயலா வகைகளில் ஈந்து,
என்றும் தந்திடும் இறைமகனார்!
ஆமென்.
காட்டிக் கொடுத்த யூதாசும்…
காட்டிக் கொடுத்த யூதாசும்…
பெண்மையே வாழ்க!

பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!
பன்னிரு பேரைத் தெரிந்தெடுத்தவரே!
அருள் சுரக்கட்டும்!
அருள் சுரக்கட்டும்!
.
தீய ஆவிக்கும் தெரியும்!
தீய ஆவிக்கும் தெரியும்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:11-12.
“தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘ இறைமகன் நீரே ‘ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தீயஆவியரும், தெரிந்தே ஆடுகின்றார்;
திருமகன் இயேசுவின்முன், தோற்று அடங்குகின்றார்.
மாயும் மனிதர்தான், மயங்கிக் கிடக்கின்றார்;
மன்னனின் இரக்கத்தை, மறுத்துத் தடுக்கின்றார்.
நேய நெறி உரைத்தும், நின்று கேட்பவர் யார்?
நேர்வழி தெரிபவர் யார்? நிம்மதி பெறுபவர் யார்?
காயம் நிறைந்தவராய், கண்முன் வருகின்றார்,
கடவுளின் திருமகனார்; காண்பார் மீட்புறுவார்!
ஆமென்.
இயேசுவின் தொடுதல் எப்படி?
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.”
நற்செய்தி மலர்:
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;
விரும்பியேதாம் தம்மைத் தந்தார்.
ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;
இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
தோற்று போனோர் தீட்டு என்றார்.
தூய்மை அறியார் மாட்டுகின்றார்.
மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;
மாறா இறையோ மீட்டெடுத்தார்!
ஆமென்.
