காணாதிருக்கும் காலம்!

காணாதிருக்கும் காலம்!

இறைமொழி: யோவான் 16: 16-18.

  1. நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
  2. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி:
  3. கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.

இறை வழி:

காணாதிருக்கும் காலம் என்றால்
கண்ணீர் வடிக்கும் நேரம்.
வீணாய் அழுது, விதி என்னாமல்,
வேண்டிப் பெறுவோம் வீரம்.
பேணாதிருக்க இறை மறப்பாரோ?
பிழைகள் ஆய்வோம் வாரும்.
கோணாதிருக்கும் வழி நடந்தால்,
குறையும் பொழுது, பாரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆவியார்!

ஆண்டவரும் ஆவியாரும்!

இறை மொழி: யோவான் 16:14-15.  14.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.  

இறை வழி:

கடந்து உள்ளில் இருக்கும் இறையை,
காட்டித் தருபவர் இறை ஆவியார்.
நடந்து நன்மை வழங்கிய மகனை,
நாளும் உரைப்பவர் இறை ஆவியார்.
கிடந்து அழுகிற மனிதரைத் தூக்கி,
கிறித்துவில் இணைப்பவர் ஆவியார்.
தொடர்ந்து அவரைப் பற்றிடுவார்க்கு,   
துணையாய் இருப்பவர் ஆவியார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உண்மை பேசுவோம்!

உண்மையின் ஆவியர்!

இறைவாக்கு: யோவான் 16:12-13.

12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

இறை வாழ்வு:

ஆவியர் பொழியும் அருள் மெய்யில்,
அகம்புறம் நனையும் கிறித்தவர்கள்,
பாவியராய் அன்று இருந்தது போல்,
பச்சைப் பொய்யின்று பேசுவதேன்?
மூவராய்த் தோன்றும் மும்மையரின்,
முதற்கனி அன்பும் பறித்தவர்கள்,
தாவியே அன்று உயிர் ஈந்த,
தலைவனை வெளியே வீசுவதேன்?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யோவான் 16:9-11.

இறை வாழ்வு:

என்னறிவில் நான் பார்க்கிற நேர்மை
எப்படி முழுமை வைத்திருக்கும்?
முன்னறிவில்லாச் செயலின் தீமை,
முடிவு வரையில் தைத்திருக்கும்.
நன்மைக் கெதிரே நிற்பின் தண்டனை,
நாட்கணக்காகக் காத்திருக்கும்.
இன்னிலை மாற்றுபவரைக் கண்டேன்;
இயேசுவால் மீட்பு பூத்திருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

ஆவியார்!

உணர்த்தும் துணையாளர்!
இறை மொழி: யோவான் 16:7-8.

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

இறை வழி:

செய்யும் செயலில் நேர்மை உண்டோ?

செயலின் முடிவே தீர்ப்பாகும்.

உய்யும் எண்ணம் உள்ளில் உண்டோ?

உண்மை வந்தால் சேர்ப்பாகும். 

பொய்யா அருள் மழை ஆவியர் உண்டோ?

புகலிடம் இழுக்கும் ஈர்ப்பாகும். 

அய்யா என நாம்  செல்வது உண்டோ?

அன்பே இறையின் வார்ப்பாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

சாதி!

சாதி!

சாதியைப் படைத்தவன் இறைவனல்ல,
சதி செய்திட்ட மனிதனே.
நீதியைப் பார்ப்பவன் அறிவிலியல்ல;
நெஞ்சைத் தொட்ட புனிதனே.
வீதியைப் பிரித்து வைப்பது நல்ல
வழிமுறை அல்ல, மனிதனே.
மீதி வாழ்விலே இணைந்து நல்ல
மனிதனால், புனிதனே!

-செல்லையா.

விடுதலை நாள் வாழ்த்து!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

யாதும் ஊரே, யாவரும் உறவே,
என்பது தானே பண்பாடு.
சூதும் தீதே, சூழ்ச்சியும் அதுவே;
சொன்னபடியே, பண் பாடு.
வாதும் கேடே, வளர்ப்பவர் கெட்டே
வாடுவார் என்றதே இந்நாடு.
போதும் தீங்கே, புரிந்தார் எங்கே?
புது வாழ்வையே இனி நாடு!

-கெர்சோம் செல்லையா.

இழப்பின் வலி!

இழப்பின் வலி!

இறை மொழி: யோவான் 16:4-6.

4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.  

5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.

6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.

இறை வழி:

இழப்பின் வலியை உணராராயின்,
இரக்கம் எப்படி பிறக்கும்?
பிழைப்பிற்கென்று கொணர்வாராயின்,
பேசம் வாக்கும் பறக்கும்.

அழுது நடித்துச் செல்பவராயின், 

அவரைக் கீழே இறக்கும்.

ஏழைக்குதவி நல்குவாராயின், 
இவரால் அன்பு சிறக்கும்.

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

இழப்பின் வலி!

இழப்பின் வலி!

இறை மொழி: யோவான் 16:4-6.

4. அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.  

5. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை.

6. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.

இறை வழி:

இழப்பின் வலியை உணராராயின்,
இரக்கம் எப்படி பிறக்கும்?
பிழைப்பிற்கென்று கொணர்வாராயின்,
பேசம் வாக்கும் பறக்கும்.

அழுது நடித்துச் செல்பவராயின், 

அவரைக் கீழே இறக்கும்.

ஏழைக்குதவி நல்குவாராயின், 
இவரால் அன்பு சிறக்கும்.

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

கொலை வெறி!

கொலை வெறி!

இறை மொழி: யோவான் 16:1-3.

1. நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

2. அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.

3. அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

இறை வழி:
வன் முறையாலே வென்றிட வெடிப்பார்,
வளராப் பிஞ்சு போலவே பழுப்பார்.
தன் வெறியாலே கொன்றிடத் துடிப்பார்,  

தப்புவதற்கு இறையும் இழுப்பார்.

நன்னிலப் பரப்பில் இறை என்ன வடிப்பார்? 
நன்மை தரவே நம்மை அழைப்பார்.

இன்னிலை அறிவார், அன்புதான் பிடிப்பார்.

யாவரும் வாழத்தான் உழைப்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.