வருவார் என்கிற வாக்கின்படியே,
வையத்தாரிறை காத்திருந்தார்.
தருவார் அவரும் தகுந்த அரசே;
தாமதமாயினும் பார்த்திருந்தார்.
இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,
ஏனோ இறைவன் பேசவில்லை.
ஒருவரும் அறியா அந்த மௌனம்,
உடைக்குமறிவும் வீசவில்லை!

The Truth Will Make You Free
இப்படி இவர்கள் எழுதிய நூற்கள்,
இசரயெல் என்று இருந்தாலும்,
ஒப்பிட இயலா இறையின் திட்டம்,
உலகம் முழுதும் மீட்பதுதான்.
அப்படி மீட்க வருபவர் குறித்து,
அறிவிக்கும் முன் வாக்குகளில்,
தப்பிதமென்று ஒன்றும் இல்லை;
தரணி மீளக் கேட்பதுதான்!
www.thetruthintamil.com