யார் ஏழை? கேட்பது அன்பு!
ஈரேழு ஆண்டுகள் முன்பு
ஏழையூர் ஒன்று சென்றோம்.
சீரேசு ஆண்டவர் பின்பு
சிலபேர் வருவது கண்டோம்.
தீராத ஆவல்கள் கொண்டு,
திரும்பவும் அங்கு சென்றோம்.
யாரேழை? கேட்டது அன்பு!
எம் தலை தாழக் கண்டோம்!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
யார் ஏழை? கேட்பது அன்பு!
ஈரேழு ஆண்டுகள் முன்பு
ஏழையூர் ஒன்று சென்றோம்.
சீரேசு ஆண்டவர் பின்பு
சிலபேர் வருவது கண்டோம்.
தீராத ஆவல்கள் கொண்டு,
திரும்பவும் அங்கு சென்றோம்.
யாரேழை? கேட்டது அன்பு!
எம் தலை தாழக் கண்டோம்!
-கெர்சோம் செல்லையா.
இருவேறு காட்சிகள்!
வாக்கு: யோவான் 11:20.
20. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
வாழ்வு:
இருவேறு காட்சி தருகிற பெண்கள்.
இயேசுவிற்கும் அன்புக் கண்கள்.
மார்த்தாள் அறிந்ததும் ஓடுகிறாள்.
மரியாள் அமர்ந்தே வாடுகிறாள்.
ஒருவரின் பற்றை அளக்கின்றவர்கள்,
ஒரே பக்கம் வளையாதிருங்கள்.
திருஅவையிலும் பன்னிலையாட்கள்.
தேவை இன்று நன்மையாளர்கள்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இழப்பில் ஆறுதல்!
வாக்கு: யோவான் 11: 17-19.
17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
18. பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
19. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
வாழ்வு:
ஆறுதல் சொல்லப் பலர் இருந்தாலும்,
ஆற மறுக்கிற இழப்பு,
தேறுதல் என்கிற இறை வரப்போகும்.
தெளியாதிருப்பது பிழைப்பு.
மாறுதல் கண்டவர் மகிழ்ந்துரைக்கும்,
மாற்றி அமைக்கும் அழைப்பு,
பேறுடன் உம்மை அண்டிக் கொள்ளும்.
பிழை நீக்கவே, உழைப்பு!
ஆமென்
-கெர்சோம் செல்லையா.
இறை வாழ்வு:
ஈராறு அடியரில் ஒருவர் தோமா.
இவரது துணிவைப் பார்க்கலாமா?
ஊரார் கொலைவெறி தெரிந்திருந்தும்
ஒளியார், இவர் தோற்கலாமா?
பேராறு அருளைப் பெற்றவர் தோமா.
பிறரை இழுப்பதும் பார்க்கலாமா?
தேறாது அழுகிற துயருற்றவரும்
தெளிவார், இவரை ஏற்கலாமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!
பிறக்கும் நோக்கம் புரியார் புரிய,
பிள்ளை ஒருவர் பிறக்கிறார்.
திறக்கும் புது வழி தெரியார் தெரிய,
தெய்வ மகனாய்ப் பிறக்கிறார்.
இரக்கம் அவ்வழி, என்றே உணர்த்த,
இரங்கும் மீட்பர் பிறக்கிறார்.
நிறைக்கும் அன்பில், நேர்மை புணர்த்த,
நெஞ்சில் இயேசு பிறக்கிறார்!
Merry Christmas ❣️
-கெர்சோம் செல்லையா.
உறக்கம்!
வாக்கு: யோவான் 11:11-15.
வாழ்வு:
இரவில் உறங்கி விழுவது போல,
இறப்பவர் விழுவது தெரிகிறது.
உறக்கம் கலைய எழுவது போல,
உயிர்ப்பவர் எழுவதும் தெரிகிறது.
எரிகிற நெருப்புள் முடிவது போல,
ஏற்கார் முடிவு தெரிகிறது.
விரிகிற ஒளிக்கதிர் விடிவது போல,
விண்ணக விடிவும் தெரிகிறது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஒளி வீசுவோம்!
வாக்கு: யோவான் 11: 8-10.
வாழ்வு:
கல்லால் அடிக்க வந்திருந்தும்,
கண்ட நெஞ்சம் நொந்திருந்தும்,
பொல்லார் என்று வெறுக்காமல்,
புவிக்கு ஒளி தருபவர் யார்?
சொல்லாம் இயேசு செல்வதுபோல்,
சொற்படி நடந்து வெல்பவராய்,
எல்லாயிருளையும் அகற்றிவிட,
இயேசு வழி வருபவர் யார்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இறை மாட்சி!
எதைச் செய்தாலும் இறையாட்சிக்கு,
என்று வாழ்தல் கிறித்தவம்.
அதன் விளைவும் அவர் மாட்சிக்கு,
அமைய விரும்பின் நெறித்தனம்.
இதைத் துறந்த இன்றையப் போக்கு,
எதனால் என்றால், வெறித்தனம்.
விதைக்கும் முன்னே, விளைவை நோக்கு;
வேண்டாம் என்றும் நரித்தனம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
வாக்கு: யோவான் 11:1-3.
வாழ்வு:
பிணி, மூப்பு, சாவு,
பிறப்பு தொட்டு உண்டு.
இனி வராது என்று,
இயம்புகிறவர் மண்டு!
அணி அணியாய் அன்று,
அழைக்கு முன்னே கண்டு,
பணி இயேசுவை இன்று,
பகிரும் அன்பு கொண்டு!
ஆமென்.