எழுபத்தி ஆறு பிறக்கிறது!

எழுபத்தி ஐந்து ஆண்டுகள் முடித்து,

இன்னொரு நாளைக் காணுகிறேன்.

இழுத்திட்ட  நட்பின் விருப்பம் எடுத்து,

இயங்கியதால் வழி கோணுகிறேன்.

பழுத்தவன் எனினும், பழிப்பிழை பிடித்து, 

படைத்தவர் முன்னே நாணுகிறேன். 

அழைத்திடும் இயேசு நீட்டிக் கொடுத்து, 

ஆளுவதால் அன்பு பூணுகிறேன்!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com