வெறித்தனம் கொண்டது இன்னொரு கூட்டம்;
வீணாய்ப் போனது செலோத்தே கூட்டம்.
பறித்திடும் உரிமை மீட்பதற்கென்று,
பட்டயம் எடுத்து வீழ்ந்த கூட்டம்.
நரித்தனம் கொண்டு ஆடிடும் ஆட்டம்,
நல் முடிவடைய சொல் ஓர் ஆட்டம்?
விரித்திடும் தீமை அழிப்பதற்கென்று,
விண் அளிக்கும் அன்பின் ஆட்டம்!