உரைப்படி இயேசு முடிக்கின்றார்!

உரைப்படி இயேசு முடிக்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14;47-49.
” அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
அழைத்தால் வந்திடும் ஆண்டவரை,
ஆயுதம் கொண்டு பிடிக்கின்றார்.
தழைத்தார் அரசின் படையினரும்,
தவறாய் நேர்மையை அடிக்கின்றார்.
பிழைத்தார் இவர்மேல் சினமுற்று,
பேதுரு அடியார் துடிக்கின்றார்.
உழைப்பார் அறிந்து அமைதிபெற,
உரைத்தார் இயேசு, முடிக்கின்றார்!
ஆமென்.

Image may contain: cloud, sky, tree, outdoor and nature

நமது நேர்மையைப் பார்ப்போம்!

நமது நேர்மையைப் பார்ப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு: 14 : 43 -46 .
“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.”

நற்செய்தி மலர்:
எத்தனையோ வழிகளிலே,
ஏமாற்ற முயல்கின்றோம்;
அத்தனையும் பொய்க்கையிலே
ஆண்டவனின் செயலென்றோம்!
இத்தரையில் இவை யாவும்,
ஏற்புடைத்த இயல்பென்றோம்.
முத்தமிட்ட யூதனை நாம்,
முதலில் ஏன் கயவனென்றோம்?
ஆமென்.

No automatic alt text available.

ஒடுக்கப்பட்டோர் உணர்வு!

ஒடுக்கப்பட்டோர் உணர்வு!

இழப்பின் வலி வருத்தும்போது,
இழக்க வேண்டாம் பொறுமை.
குழப்பம் செய்தார் என்றுகூறி,
கொடுப்பார் நமக்கும் சிறுமை.
உழைக்கும் மக்கள் உயரும்போது,
ஊரார் புகழ்வது அருமை;
பிழைக்குற்றங்கள் புரிவது வெறுப்பீர்;
பேரன்பேதான் பெருமை!

-கெர்சோம் செல்லையா

 
Image may contain: 5 people, people standing

கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை!

கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை!
நற்செய்தி மாலை: மாற்கு 14:39-42.
“அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:
காட்டிக் கொடுப்பவன் வருவதை அறிந்து,
கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை.
கூட்டில் விழுந்த பறவையாய் நொந்து,
கூட்டம் கூட்டவும் விளிக்கவில்லை.
ஆட்டம் போட்டு அலறும் நாம்தான்,
அடுத்தவர் துயரிலும் ஒளிக்கின்றோம்.
பாட்டில் சொல்லும் பொருளையறிந்தால்,
படைத்தவர் விருப்பில் களித்திடுவோம்!
ஆமென்.

Image may contain: one or more people and people standing

நம்பமாட்டார்!

நம்பமாட்டார்!

இவரெல்லாம் ஏன் இப்படிக் கெட்டார்?
என்று கேட்கப் பதில் என்ன இட்டார்?

தவறெல்லாம் இவர் சரியெனக் கேட்டார்;
தாய் தந்தை ஆசான் தவறி விட்டார்.

சுவரெல்லாம் இவர் படத்தைப் போட்டார்;
சூழும் உலகால் புகழப்பட்டார்.

கவலை கொண்ட கடவுளின் வீட்டார்,
கயமை என்பார், நம்ப மாட்டார்!

 
No automatic alt text available.

இறையிடம் பேசும்!

இறையிடம் பேசும்!
நற்செய்தி மாலை:மாற்கு:14:37-38.
“அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், ‘ சீமோனே, உறங்கிக் கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஆவியர் ஆள நம் ஆவியும் அடங்கும்;
அடங்கும்போதே, அறவழி தொடங்கும்.
சாவினை வழங்கும் ஊன்வழி முடங்கும்.
சரி செய்தாலே, சாத்தனும் மடங்கும்.
தாவிடும் குரங்கென இருந்தது போதும்;
தவற்றைத் திருத்துமே, தெய்வத்தின் தூதும்.
பாவியர் நெஞ்சைப் பழித்திடும் தீதும்,
பறந்துபோகுமே, இறையிடம் ஓதும்!
ஆமென்.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

நானும் குடிப்பேன்!

நானும் குடிப்பேன்!
நற்செய்தி மாலை: மாற்கு
“சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36 ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கையில் தந்த கிண்ணம் பிடித்தேன்;
கனவாய் நினைத்துக் கசப்பைக் குடித்தேன்.
பையில் இன்னும் இருப்பது கண்டு,
பதறி நானும் நெஞ்சு துடித்தேன்.
ஐயா, எனக்குப் போதும் என்று,
அவற்றை வீசி கையும் கடித்தேன்.
மெய்யானவரோ, என்னைப் பிடித்தார்;
மெதுவாய் எடுத்தேன், துன்பம் குடித்தேன்!
ஆமென்.

No automatic alt text available.

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல்,
எவ்வளவென்று மலைக்கின்றார்.
இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி,
எளியரும் பண்பைக் கலைக்கின்றார்.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி,
தரணியைச் சீர் குலைக்கின்றார்.
அப்படிப்பட்டோர் கையினில் மீள,
அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, text

இறப்பு என்னும் துயில்!

இறப்பு என்னும் துயில்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:32-34.
” பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ‘ நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
இறப்பைக் குறித்து எண்ணும்போது,
யாவரும் அடைவது திகிலாகும்.
எங்கு செல்வோம் என்றறியார்க்கு,
எட்டும் உயரம் முகிலாகும்.
பிறப்பின் பொருளை அறிவாருக்கு,
இறப்பு ஒருவகை துயிலாகும்.
பிறவி தந்த இறையுடன் இணையும்
பெரும்பேறுதான் ஒயிலாகும்!
ஆமென்.

No automatic alt text available.

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!

சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:29-31.
” பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவரோ, ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் உரைப்பது எல்லாம்,
உண்மை என்றென எடுக்காதீர்.
மணக்கும் ஆவியர் திட்டம் என்றும்
மறைபொருள் விளக்கம் கொடுக்காதீர்.
இணக்கம் இல்லா முடிவும் வேண்டாம்;
இறையின் விருப்புள் தொடுக்காதீர்.
சுணக்கம் இல்லாச் சொல்லே போதும்;
சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
ஆமென்.

No automatic alt text available.