வாழ்வானாலும் தாழ்வானாலும்…

வாழ்வானாலும் தாழ்வானாலும்…
நற்செய்தி மாலை: மாலை: மாற்கு 14:69-71.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ‘ இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ‘ என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ‘ உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ‘ என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ‘ நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.”
நற்செய்தி மலர்:
வாழ்வானாலும் சாவானாலும்,
வந்தோம் உம்முடன் என்பவரும்,
தாழ்வானாலும் உயர்வானாலும்,
தந்தோம் தம்முடல் என்பவரும்,
வீழ்வார் உலகில் வீழக்கண்டோம்;
விண்ணரசே எமை நோக்கிடுமே.
பாழாய் நாங்கள் மாளாதிருக்க,
பாவப் பழியும் நீக்கிடுமே!
ஆமென்.

Image may contain: 1 person, text

கறுப்பாடு!

கறுப்பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ‘ என்றார்.68 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை’ என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).”
நற்செய்தி மலர்:
மறுத்துரைத்த பேதுரு போன்று,
மாபெரும் தவற்றைச் செய்கின்றோம்;
வெறுத்து இயேசு கைவிடவில்லை;
விரும்பி ஏற்க, உய்கின்றோம்.
பொறுத்து நாமும் அமைதிகொண்டு,
பொய்யருக்காக வேண்டிடுவோம்;
கறுத்துபோன ஆடுகள் மீளும்;
கடவுளின் அருஞ்செயல் கண்டிடுவோம்!
ஆமென்.

No automatic alt text available.

தறிகெட்ட ஆடுகள்!

தறிகெட்ட ஆடுகள்!

வெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,
வெளியே அன்பைக் கூறுகிறோம்.
நெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,
நேர்மை உருபோல் மாறுகிறோம்.
குறி தவறாகும் வினையே செய்து,
குற்றங்களில்தான் தேறுகிறோம்.
தறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;
தாங்கும் இறையே, ஏறுகிறோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and cat

அவர் அடிக்கப்பட்டபோது!

அவர் அடிக்கப்பட்டபோது!
நற்செய்தி மாலை: மாற்கு: 14:65.
“பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ‘ இறைவாக்கினனே, யார் எனச் சொல் ‘ என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”
நற்செய்தி மலர்:
வந்தவர் போனவர் அடிக்கின்றார்;
வசைச் சொல்லாலும் இடிக்கின்றார்.
தந்தவர் யார் எனத் தெரியவில்லை;
தலையை மூடிப் பிடிக்கின்றார்.
இந்தியக் கிறித்தவர் துடிக்கின்றார்.
எதிர்க்கும் சொல்லையும் வெடிக்கின்றார்.
மைந்தனின் வழியில் வருபவரோ,
மன்னிப்பருளி முடிக்கின்றார்!
ஆமென்.

Image may contain: 9 people, people standing

வரி!

என்ன வரியில்லை இந்தத் திரு நாட்டில்?
எங்கே போயிற்று, அவை காட்டில்?
சொன்னதெல்லாம் மறைந்தனவே இவர் ஏட்டில்!
சொறிவதற்கும் வலுவில்லை, உடற் கூட்டில்!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

இறைவனைப் பழித்தாரா இயேசு?

இறைவனைப் பழித்தாரா இயேசு?
நற்செய்தி மாலை: மாற்கு 14:63-64.
“தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ‘ இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ‘ என்று கேட்க, அவர்கள் அனைவரும், ‘ இவன் சாக வேண்டியவன் ‘ என்று தீர்மானித்தார்கள்.”
நற்செய்தி மலர்:
இன்றையத் தலைவரின் தவற்றைச் சொன்னால்,
இந்திய எதிரி என விளிப்பார்!
அன்றைய நாட்களில் அறிவைச் சொன்னால்,
ஆண்டவர் எதிரி எனப் பழிப்பார்!
என்றும் மனிதர் இதைத்தான் செய்வார்;
எமாற்றித்தான் தமையழிப்பார்;
நன்றாய் எண்ணி நன்மை செய்வார்
நலிந்தவராயினும், இறை களிப்பார்!
ஆமென்.
Image may contain: one or more people and text

பொய்யுரைப்பார் முன்னிலையில்….

Image may contain: 1 person
பொய்யுரைப்பார் முன்னிலையில்….
நற்செய்தி மாலை: மாற்கு 14:60-62.
“அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ‘ இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா? ‘ என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ‘ போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ‘ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, ‘ நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘ என்றார்.”
 
நற்செய்தி மலர்:
பொய்யுரைப்பார் முன்னிலையில்
பொறுமையுடன் நின்றார்.
மெய்யுரைக்கப் பண்ணுகையில்,
மெய்யே தான் என்றார்.
அய்யனேசு வழியில்தான்
அடியவரும் சென்றார்.
தொய்வின்றித் துணிந்துரைத்தால்,
தோற்பதில்லை என்பார்!
ஆமென்.

உண்மையுரைப்பவரே வெல்வார்!

உண்மையுரைப்பவரே வெல்வார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:56-59.
“பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ‘ மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ‘ என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.”

நற்செய்தி மலர்:
வழக்கில் வெற்றி காண்பதற்கு,
வாய்நிறையப் பொய் சொல்வார்.
இழக்கும் மானம் எண்ணாது,
இழிவினிறுதிக்கும் இவர் செல்வார்.
கிழக்கு தொடங்கி மேற்குவரை,
கிறித்தவப்பெயரிலும் பலர் கொல்வார்.
உழக்கு படியாய் மாறாது;
உண்மையுரைப்பவரே வெல்வார்!
ஆமென்.

No automatic alt text available.

முடிவை முதற்கண் எடுத்துவிட்டு….

முடிவை முதற்கண் எடுத்துவிட்டு….
நற்செய்தி மாலை:மாற்கு 14:53-55.
“அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முடிவை முதற்கண் எடுத்துவிட்டு,
முறையற்று வழக்கைத் தொடங்குகிறார்.
படித்தவர் போர்வையை உடுத்துக்கொண்டு,
பண்பற்றுத் தீமையுள் முடங்குகிறார்.
அடிமைபோல் நிற்கும் எழையரோ,
அதைப் புரியாமலே மடங்குகிறார்.
விடியும் ஒரு நாள் இறையரசு;
வீணாய்ப் போனோர் அடங்கிடுவார்!
ஆமென்.

Image may contain: 5 people

உணர்ச்சிப் பெருக்கில்….

உணர்ச்சிப் பெருக்கில்….
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் ஆடுவார்கள்;
உதவி கேட்டால் ஓடுவார்கள்.
மணலால் கட்டிய வீடு இவர்கள்;
மறுபடி மீண்டும் கூடுவார்கள்!
தணலாய் எரிக்கும் ஆவி அவர்கள்
தன்மை மாற்றத் தேடுவார்கள்.
சணலால் நெய்த ஆடையிழந்து,
சாகா மீட்புடை உடுப்பார்கள்!
ஆமென்.

Image may contain: hat