யோவான் 8:39-40.

நல்வழி:


தந்தையர் நேர்மையைப் போற்றியுரைத்தல்,

தவறு என்று சொல்லேன் நான். 

முந்தையர் விதைத்த நன்மையின் பயனை,

முழுவதும் இன்று அறுப்பவன் யான். 

மைந்தனாய் தந்தையின் பண்பைக் கொண்டு,

மனிதருக்கென்ன செய்தேன் நான்?

எந்தையிறையே, என்னைத் தந்தேன்;

இயேசு போன்று நடக்கத்தான்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

பெற்றோரிடம் கற்றது என்ன?

பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?
நற்செய்தி: யோவான்: 8:37-38.

நல்வழி:


பெற்றோர் சொல்லித் தந்தது என்ன?

பெரியோர் என்பின் சிந்திப்பீர். 

கற்றோர் என்றால் கொலை செய்வாரா?

கயமை வெறியினை நிந்திப்பீர். 

தொற்றாதிருக்கிற நற்பண்பென்ன? 

தூயோன் இயேசுவைச் சந்திப்பீர். 

உற்றார் உறவாய் யாவரும் வருவார்;


ஒவ்வொருவரையும் மன்னிப்பீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நாலடி நற்செய்தி!

எது மீட்கும்?

 
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;

உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.  

எங்கள் மீட்பு  இதனைச்  சொல்லும்;


இறைவழி தானே என்றும் வெல்லும்!

-செல்லையா.

என்னுடன் இருப்பவர்!

என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.

நல்வழி:

என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,

எங்கும் நடத்தும், என் இறையே,

தன்னம் தனியே தள்ளவும் தடுத்து, 

தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே. 

இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;

இறைவழி காட்டிடும் திருமறையே. 

சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,

சீராக்கட்டும் இவர் குறைவே! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

தாழ்வு தருகிற உயர்வு!

தாழ்வு தருகிற உயர்வு!

நற்செய்தி: யோவான் 8:28.

நல்வாழ்வு:


தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,

தவறாதிறை முன் வருவீரே. 

வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,

வளமாம் தாழ்மை பெறுவீரே.

ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;

இறையறிவாகும், தெரிவீரே. 

ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,

அன்பால் நன்மை புரிவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

இயேசு யார்?

இயேசு யார்?


நற்செய்தி: யோவான் 8:25-27

நல்வழி:


என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,

என்னை ஆளும் ஏசுவே,

முன்னில் வந்து, கேளாதிருந்து, 

முனகுவாரிலும் பேசுமே. 

தன்னைக் காணும் தன்மை ஈந்து,

தவற்றினின்று மீளுமே. 

பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,

பேரறிவாலே ஆளுமே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

விண் பார்ப்போம்!

விண் பார்ப்போம்!

நற்செய்தி: யோவான் 8:23-24

நல்வழி:


கண்ணைக் கட்டி, காட்டில் விட்ட,

கதை போல் வாழும் மானிடா,

எண்ணத் தூய்மை எப்படிப்பட்ட,

இனிமையான தேனடா!

மண்ணைத் தேடின், மண்ணேயாகும்,

மனதின் எண்ணம் தானடா. 

விண்ணைப் பார்த்து, வேண்டு தூய்மை. 

விடியும் வாழ்வு வானடா!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

தற்கொலை!

நற்செய்தி: யோவான் 8: 22.

நல்வழி:


உன் பிறப்பு, உன் விருப்பா?

உண்மை அது இல்லை. 

என் இறப்பு, என் முடிவா?

எனக்குரிமை இல்லை. 

தன் பிறப்பின் நோக்கறிவின்,

தவறுமிடம் இல்லை.

நன் வாழ்வு, நம் இறையில்;

நம்பின், குறைவில்லை!

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

தீமை!

தீங்கின் முடிவு!  


நற்செய்தி: யோவான் 8:20-21.


20. தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.  


நல்வழி: 


தீங்கை விற்கும் தீமையாளர்,

தெய்வ மீட்பை வாங்காரே.

ஏங்கி நின்றும், ஏற்கா மனிதர்,

இறுதித் தீர்ப்பைத் தாங்காரே.

வாங்கி விற்கா மீட்பையருள்வார்;

வல்லமை இறையும் தூங்காரே. 

தாங்கி ஏற்று நம் பழி சுமந்தார்;

தனையன் அன்பில் நீங்காரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

நாலடி நற்செய்தி…6.

நாலடி நற்செய்தி …6. 

அன்பு!


தன்னலம் இல்லா நிலைதான் அன்பு;

தருகிற  இறையிடம் கற்பாயா?

உன்னினம் கடந்து உதவும் பண்பு,

உண்மை அறமென நிற்பாயா?

-செல்லையா.