உயிர்த்தார் இயேசு என்றே உரைத்து,

உயிரும் ஈந்தார் அந்நாளில்.

வயிற்றால் வாழ்ந்து, வஞ்சிப்போரே

வளருகின்றார் இந்நாளில்.

கயிற்றால் கட்டப் பட்டிருப்பாரை

கரை சேர்ப்பது எந்நாளில்? 

பயின்றார், மறந்தார் என்றில்லாமல், 

படைத்து, பணிகிற நன்னாளில்!

(திருத்தூதர் பணிகள் 5, 6 & 7)