புழு!

புழு!

மண்ணில் உழலும் புழுவைக் கண்டு, 

மனித பெருமை அகலக் கண்டேன்.

கண்ணில் காணும் அப்புழு உண்டு,

கால் நீட்டும் தவளையும் கண்டேன்.

அந்த தவளையை விழுங்கிக் கொண்டு,

அடி வாங்கும் பாம்பும் கண்டேன்.

இந்த பெருமை புகழ் தூள் துண்டு!

இவனை உண்ணும் புழு கண்டேன்!

-கெர்சோம் செல்லையா.