நலம் எது என்று நாம் கேட்போம்?

நலம் எது என்று நாம் கேட்போம்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:29-33.
“இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘ நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ‘ என்றார். அவர்கள், ″ ‘ விண்ணகத்திலிருந்து வந்தது ‘ என்போமானால், ‘ பின் ஏன் அவரை நம்பவில்லை ‘ எனக் கேட்பார். எனவே ‘ மனிதரிடமிருந்து வந்தது ‘ என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ‘ எங்களுக்குத் தெரியாது ‘ என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ‘ எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
ஏன், எதற்கு, எப்படி என்று,
எத்தனை கேள்வி நாம் கேட்டோம்?
வான் மைந்தன் நம்முன் இன்று,
வந்து கேட்டால் என் சொல்வோம்?
நான் என்னும் அகந்தை விட்டு,
நலமெது என்று நாம் கேட்போம்.
தேன் இனிமை வாக்கு தொட்டு,
தூயவர் திட்டம் தெரிந்திடுவோம்.
ஆமென்.

Image may contain: sky, cloud, outdoor and nature

ஆணையுரிமை யார் தந்தார்?

ஆணையுரிமை யார் தந்தார்?
நற்செய்தி மாலை: மாற்கு 11:27-28.
“அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ‘ எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
ஆணையுரிமை யார் தந்தாரென,
அறவழி அடைக்கும் அறிஞரே,
சாணை பிடிக்காக் கத்தி அதுவே;
சண்டையிடும் நீர் வறியரே.
கோணலை நேர்மை என்றேயுரைத்துக்
கொடுமை செய்யும் தலைவரே,
வீணராய் இப்படி நடப்பவர் முடிவில்,
வெம்பி நொந்து அலைவரே!
ஆமென்.

Image may contain: beard, text and one or more people

பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!

பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:25-26.
” நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்’ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனையோ முறைகள்
எளிதாய் தவறுகள் நாமிழைத்தோம்.
அத்தனையும் அவர் மன்னித்தார்;
அதனால்தானே உயிர் பிழைத்தோம்.
இத்தனை ஆண்டுகள் பெற்றிருந்தும்,
எங்கே, எவர்க்கு மன்னித்தோம்?
பித்தினை விட்டே திருந்திடுவோம்;
பெறுவதைக் கொடுத்து இன்புறுவோம்!
ஆமென்.

Image may contain: 1 person , text

அடைந்தோம் என்ற உறுதி!

 

அடைந்தோம் என்ற உள்ளுணர்வு …
நற்செய்தி மாலை:மாற்கு 11:24.
“ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.”
நற்செய்தி மலர்:
கிடைக்கும் என்ற நம்பிக்கை,
கிறித்துவில் கிடைக்கும், கேட்டிடுவோம்.
அடைந்தோம் என்ற உள்ளுணர்வும்,
அவர் தருவார், அதைக் கூட்டிடுவோம்.
உடைப்பது கடினம் என்பவர் முன்,
உடைந்த பூட்டைக் காட்டிடுவோம்.
விடைக்கென்றேசு இருப்பதனால்,
வேண்டாம் கவலை, கொட்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: one or more people

இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!

இனிய ஒளிநாள் வாழ்த்துகள்!

இருளைப் பிரித்து, எழும்பும் ஒளிபோல்,
பொருளை விரித்து, அறிவொளி கொடுப்போம்.
அருளைத் திரிக்கும் பிரிவினை வெறுத்து,
ஒருமைப்பாட்டில் வெற்றியும் எடுப்போம்!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

மலையைப் பெயர்க்கும் பற்று!

மலையைப் பெயர்க்கும் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 11:20-23.
“காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, ‘ ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று ‘ என்றார். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, ‘ கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘ பெயர்ந்து கடலில் விழு ‘ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்”.
நற்செய்தி மலர்:
மலையைப் பெயர்த்துக் கடலில் கொட்டும்,
மாபெரும் பற்றும் எனக்கில்லை.
கலையழகுள்ள சிலைபோல் கட்டும்,
கைத்திறன் அறிவும் எனக்கில்லை.
விலை மதிப்பில்லா பொருளாய்க் கிட்டும்,
விண்ணின் அன்பும் எனில் இல்லை.
இலைபோல் வாடும் நிலையை ஓட்டும்,
இயேசுவைப் பார்த்தேன், குறைவில்லை!
ஆமென்.

கயமை வளர்த்தவே கல்வியா?

கயமை வளர்த்தவே கல்வியா?
நற்செய்தி மாலை: மாற்கு 11:18-19.
“தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கயமை வளர்ப்பவர் யார் என்றேன்?
கற்றவர் பெயரைத்தான் சொன்னார்!
கற்ற கல்வி எதுயென்றேன்?
கல்வியும் கொள்ளைதான் என்றார்!
இயங்கும் அமைப்பே தப்பென்றால்,
எப்படி நன்மை வரும் என்றேன்?
எல்லாம் நன்மையாக்குபவர்,
இறைவன் நம்முள்தான் என்றார்!
ஆமென்.

No automatic alt text available.

தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!

தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 11:15-17.
“அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.” என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் ‘ என்று மறைநூலில் எழுதியுள்ளது ″ என்று அவர்களுக்குக் கற்பித்தார்; ‘ ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
காசு பணம் வாங்கா மீட்பை,
கடவுள் பெயரால் அறிவித்தோம்.
பேசுகின்ற சொல்லின் எடைக்கு,
பெருந்தொகையைக் குறிவைத்தோம்.
மாசு மருவில்லா இயேசை,
மண், பொன் வாங்க மறுதலித்தோம்;
தூசும் எதிராய்ச் சான்றுரைக்கும்,
திருந்தாவிடில் அறுபடுவோம்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

உண்மையன்பால் அழகூட்டுமே!

உண்மையன்பால் அழகூட்டுமே!

சமயம் என்பது, சாயம் மட்டுமே.
சடங்கு செய்கிறார், அதைக் காட்டவே.
இமயம் போன்றது, இவரின் தீட்டுமே;
இதை மறைக்கவே, ஆர்ப்பாட்டமே!

அமைதி என்பது இறையில் மட்டுமே.
அன்பு உருவமே அதைக் காட்டுமே.
உமைப் படைத்ததும் அவர் திட்டமே.
உண்மையன்பால் அழகூட்டுமே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: beard and one or more people

பொங்கி உம்மை வாழ்த்துவரே!

பொங்கி உம்மை வாழ்த்துவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 11:12-14.
“மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, ‘ இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது ‘ என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
பசியென்று வருபவரை,
பரிவுடன் பார்த்திடுவீர்.
புசியென்று உணவளித்து,
புன்னகையும் சேர்த்திடுவீர்.
கசியென்று இறையருளை,
கண் கலங்கிக் கேட்பவர்கள்,
பொசியும் அவரன்பால்,
பொங்கியுமை வாழ்த்துவரே!
ஆமென்.

Image may contain: 1 person