தடைக் கற்களை உடைத்துப் போடும்
தாவிது, ஈசயின் புதல்வன்.
கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும்,
இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும்,
இறைப் புகழ் பாடிய புலவன்.
கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும்,
கேட்போர் போற்றும் தலைவன்!
(1 & 2 சாமுவேல்)

The Truth Will Make You Free
தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).

தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).
