மறம் தழைக்க, மாண்புகள் இழக்க,
மனிதம் மறைந்த அந்நாளில்,
அறம் செழிக்க, அரசரை இழுக்க,
திறம் தெரியா மக்களை ஈர்த்து,
தெய்வ வழியில் திருப்புதற்கு,
நிறம் மாறா இறைவாக்குரைத்து,
நேர்மையையே நோக்கினார்!
(1&2 அரசர்கள் )

The Truth Will Make You Free
ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நூலை,
உணர்ந்தவர் தந்தார் உள்ளில் கேட்டு.
செவ்விளக்குருதி துடித்தெழும் நாளில்,
சிந்தையில் வடித்தார் இனியப் பாட்டு.
அவ்விதமாக வளர்ந்தவர் வரைந்தார்;
அடுத்த நூலோ அறமொழித் திரட்டு.
எவ்வித வாழ்விலும் இருக்கிற மாயை;
இறையால் மாற, இறுதிநூல் புரட்டு!
(இனிமைமிகு பாடல், நீதிமொழிகள், சபை உரையாளர்)
