இறுதி மூச்சை யாரிடம் விடுவோம்,

என்று கேட்பவர் யார் இங்கே?

அறுதி வாக்கை ஆண்டவர் கூறும்,

அந்தக் காட்சி பார் அங்கே.

உறுதியாக ஒன்றினை அறிவோம்;

உயிர் ஈகிறார் இறை இங்கே.

மறதி என்றும் கெட்டிட வேண்டாம்; 

மனித உயிர் நிறைவங்கே!

( லூக்கா 23:46).