கொன்று போட்டால் கேட்பாரில்லை, 

கொல்வோம் என்பார் நடுங்கிட, 

அன்று தெய்வம்  அதிசயம் செய்தார்;

அவர் மகனை உயிர்ப்பித்தார். 

சென்று ஒளிந்த  அடியரைத் திருத்த,

செய்தியை மட்டும் சொல்லாது, 

தின்று, தெளிய, தொட்டிட வைத்தார்;

தெய்வ மகன் மெய்ப்பித்தார்!

(மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20 & 21).