கிறித்துவில் வாழ்வு:
இறுதி வேளை இயேசுவை ஏற்பேன்,
என்று நழுவும் நண்பர்களே,
உறுதியாக உம்மில் வருமோ,
உணர்ந்த கள்வன் பண்புகளே?
அறுதி நேரம் அறியா வாழ்வில்,
அளிக்கும் நொடிகள் செல்வங்களே.
கருதி இன்றே திருந்தினால்தான்,
கடவுள் ஏற்பார், பிள்ளைகளே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
Author: Gershom Chelliah
இகழும் கள்வன்!
இகழும் கள்வன்!
கிறித்துவின்வாக்கு: லூக்கா 23: 39.
39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
கிறித்துவில் வாழ்வு:
என்ன எதுவெனத் தெரியாமல்,
இகழ்வோர் நம்மில் பலருண்டு.
சொன்ன கள்வனும் இவரைப்போல்,
சொல்வதில் என்ன வியப்புண்டு?
முன்னும் பின்னும் அறியாமல்,
மொழிந்தால் என்ன பயனுண்டு?
இன்னாள் இதனை நாமுணர்ந்து,
ஏசுவை அறிந்தால் மீட்புண்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மும்மொழிகள்!
மூன்று மொழிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 38.
38 இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
கிறித்துவில் வாழ்வு:
மூன்று மொழிகளில் எழுதி வைத்தார்,
முள்முடி வேந்தனின் வெளிப்பாட்டை.
தோன்று மொழிகளை நாம் மதித்தால்,
துயருந் துவட்டுமோ இந்நாட்டை?
சான்று இதுவென நான் உரைத்தால்,
சண்டைக்கெடாதீர் இப்பாட்டை.
ஈன்று எடுக்கிற இறையறிவால்,
எங்கும் ஒழியும் மொழிவேட்டை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஏளனம்!
ஏளனம் செய்கிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 35-37.
35 ஜனங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள்.
36 போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37 நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
யாரிவர் இயேசு, என்றென அறியார்,
ஏளனம் செய்து இகழ்கின்றார்.
வேரினை முறித்து விளைச்சல் கேட்பார்;
வீணாய் மண்ணை அகழ்கின்றார்.
ஊரினில் இவர்போல் பலபேர் உள்ளார்;
உண்மை இழந்துத் திகழ்கின்றார்.
பாரினை மீட்கும் பணியென அறிவார்,
பணிந்து இறையைப் புகழ்கின்றார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பொங்கல்!
பொங்கல் வாழ்த்துகள்!
ஒருவரை ஒருவர் மதித்து,
ஒவ்வொருவரையும் பொறுத்து,
பெருமை, பிளவும் வெறுத்து,
பெரியோர் உண்பார் பொங்கல்.
தெருவினில் குப்பை தவிர்த்து,
தெரியாத் தொற்றும் தடுத்து,
அருவருப்பனைத்தும் விடுத்து,
அன்பாய் உண்போம் பொங்கல்!
வாழ்த்துகள்!
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை-600099.
பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கல் வாழ்த்துகள்!
ஒருவரை ஒருவர் மதித்து,
ஒவ்வொருவரையும் பொறுத்து,
பெருமை, பிளவும் வெறுத்து,
பெரியோர் உண்பார் பொங்கல்.
தெருவினில் குப்பை தவிர்த்து,
தெரியாத் தொற்றும் தடுத்து,
அருவருப்பனைத்தும் விடுத்து,
அன்பாய் உண்போம் பொங்கல்!
வாழ்த்துகள்!
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை-600099.
பொங்கல் வாழ்த்து!
பொங்கல் வாழ்த்துகள்!
ஒருவரை ஒருவர் மதித்து,
ஒவ்வொருவரையும் பொறுத்து,
பெருமை, பிளவும் வெறுத்து,
பெரியோர் உண்பார் பொங்கல்.
தெருவினில் குப்பை தவிர்த்து,
தெரியாத் தொற்றும் தடுத்து,
அருவருப்பனைத்தும் விடுத்து,
அன்பாய் உண்போம் பொங்கல்!
வாழ்த்துகள்!
-கெர்சோம் செல்லையா,
இறையன்பு இல்லம்,
24, செக்ரெட்டேரியட் காலனி,
இலட்சுமிபுரம்/இரட்டை ஏரி,
குளத்தூர், சென்னை-600099.
நம் வேண்டல் என்ன?
நம் வேண்டல் என்ன?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:34.
34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
நிந்தை சுமக்கும் நேரங்களில்,
இந்த மாந்தர் என் செய்வார்?
சொந்த விடுதலை கேட்பவராய்,
நொந்து அழுது வேண்டிடுவார்.
அந்த சிலுவையில் ஆண்டவரோ,
விந்தை வாக்கால் பேசுகிறார்.
தந்தை இறையின் மன்னிப்பை,
மந்த கயவர்க்கு வேண்டுகிறார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
கொடுமை!
கொடுமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 32-33.
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.
33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
குற்ற மற்ற ஒருவரைக் கொல்லல்,
குறையுள்ள அமைப்பின் கொடுமை.
மற்ற குற்றவாளியோடறைதல்,
மனிதர் நிகழ்த்தும் கொடுமை.
பெற்ற தீங்கை நமக்கென ஏற்றும்,
பேரருள் மறுத்தல் கொடுமை.
நற்றமிழ் வாக்கில் நாமின்று கேட்டும்,
நன்றி மறப்பின் கொடுங்கொடுமை!
ஆமென்.
ஒரு மூலையிலிருந்து…….2
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்!
பிற்படுத்தப்பட்டவர் பட்டியலைத் திருத்தவேண்டிய காலம் வந்துள்ளது என்பது என் கருத்தாகும். அன்று பிற்படுத்திப் புறம் தள்ளியோரும், இன்று சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்து இடம்பிடித்து இருகிறார்கள்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வெள்ளையர் நாளில் சேர்க்கப்பட்டவர்கள், தங்களைப் பொதுப்பட்டியலில் சேர்க்க வேண்டிப் போராடியதும், முன்னேறியவர்கள் என்று தங்களைக் கருதியிருந்தவர்கள் அதைத் தடுத்து வழக்காடியதும் நாம் அறிவோம். இன்று அம்மக்களும் சலுகைகளுக்காகப் பிற்படுத்தப்பட்ட வரிசையே போதுமென்று, இருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் எப்போது முன்னேறுவார்கள்? எப்போது முன்னேறிய வர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்?அன்றிலிருந்தே கல்வியிலும், சமுதாய நிலையிலும் உயர்வாய் இருந்தவர்களை, இனியும் பிற்படுத்தப்பட்டவர்கள் வரிசையில் நிற்கவைத்துச் சலுகை பெறவைப்பது, இதர எளியவர்களை ஏமாற்றுவது ஆகாதா? இதைத் திருத்தவேண்டியது இன்றையத் தேவை அல்லவா? எல்லோருக்கும் கல்வியை, எல்லாக் கல்வி நிலையங்களிலும் அரசு உதவியோடு விலையின்றிக் கொடுங்கள். கற்க வருகிற இடங்களில் சாதி சமயம் பாராதீர்கள், பதிவு செய்யாதீர்கள். தனியார் தங்களைக் கல்வி வள்ளல்களாகக், காண விரும்பினால் அல்லது காட்ட விரும்பினால், விலையின்றிக் கொடுக்கட்டும்! அரசு உதவி பெறாமல் கொடுக்கட்டும்! இனம் பார்த்துக் கொடாமல் யாவருக்கும் கொடுக்கட்டும்! எல்லோரையும் கற்கச் செய்யுங்கள். சாதியென்றும் சமயம் என்றும் கேளாதீர்கள், பிரிக்காதீர்கள்! கற்பவர் திறன் கண்டு ஊக்குவியுங்கள். இதுதான் நற்கல்வியாகும்! பணியிடங்கள், பதவி உயர்வுகள் எனும்போது சாதி, சமயத்தைப் பார்க்காமலும், காசு வாங்காமலும், அரசியல் ஆட்கொணர்வு செய்யாமலும் இருக்க, இத்தகைய ஊழல் செய்வோரைத் தண்டிக்க கடும் சட்டங்கள் இயற்றுங்கள். தவறுவோரைத் தண்டியுங்கள். இது அரசின் உயர் பதவிகளுக்கும் பொருந்தட்டும், நீதித்துறைக்கும் பொருந்தட்டும்; தனியார் நிறுவனங்களுக்கும் பொருத்தட்டும்!அப்போதுதான் கல்வியிலும் பணிகளிலும் அனைவருக்கும் உரிய வாய்ப்பு கிடைக்கும். நல்லெண்ணப் போட்டிகள் நடைபெறும். திறமை பாராட்டப்படும். இப்படிச் செய்தால்தான் இந்தியா முன்னேறும். இந்நாட்டு மக்கள் வாழ்வும் முன்னேறும். இதை விட்டுவிட்டு, எத்தனைக் காலம் சாதி என்றும், சமயம் என்றும், உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் இந்தியரைப் பிரித்து, பிற்படுத்தப்பட்டுக் கிடப்பீர்கள்? இது, எல்லாச் சாதி-சமயத்தவரால் கற்பிக்கப்பட்டு, கற்க ஊக்குவிக்கப்பட்டு, பற்பலப் பணிகள் பெற்று, பலவித நன்மைகள் பெற்று வாழும் ஓர் இந்தியத் தமிழனின் கருத்தாகும்! -கெர்சோம் செல்லையா.