எந்த மலையென யானும் அறியேன்;

இயேசு அமர்ந்து பொழிகிறார்.

தந்தை இறையின் அரசிற்கழைத்து,

தாழ்மை நாடி மொழிகிறார்.

இந்த நாளிலும் இதுபோற் செய்தி, 

இல்லை என்றே சொல்கிறார்.

நைந்த நெஞ்சும் செம்மையாகும்,

நேர்வழி வந்தோர் வெல்கிறார்!

(மத்தேயு: 5-7)