வாக்கால் அலகை வென்றவர் எழுந்து,

வானக அரசைத் தொடங்கினார்.

நோக்காதிருந்த கலிலெயர் விழுந்து,

நொடியில் திருந்தி அடங்கினார்.

சேர்க்காதிருக்க விழைந்தோர் மட்டும்,

செரிக்க விடாது மடங்கினார்.

தீர்க்காதிருக்கும் தீவினை கொட்டும்;

திருந்தாவிடில் அவர் முடங்குவார்!

(மத்தேயு 4:11-17)