வாக்கால் அலகை வென்றவர் எழுந்து,
நோக்காதிருந்த கலிலெயர் விழுந்து,
நொடியில் திருந்தி அடங்கினார்.
சேர்க்காதிருக்க விழைந்தோர் மட்டும்,
செரிக்க விடாது மடங்கினார்.
தீர்க்காதிருக்கும் தீவினை கொட்டும்;
திருந்தாவிடில் அவர் முடங்குவார்!
(மத்தேயு 4:11-17)