பன்னிரு ஆண்டுகள் முடிந்தது கண்டு,

படைத்தோன் கோவில் சென்றனர்.

நன்னிறை நல்கிய நன்மைக்கென்று,

நற்பலி செலுத்தி நின்றனர்.

பின்வருவாரென எண்ணிக் கொண்டு,

பெற்றோர் திரும்பி வந்தனர்.

என்னிறை மகனோ அறிஞரின் முன்பு,

எண்ணா அறிவைத் தந்தனர்!

(லூக்கா 2)

May be an image of 3 people