பன்னிரு ஆண்டுகள் முடிந்தது கண்டு, படைத்தோன் கோவில் சென்றனர். நன்னிறை நல்கிய நன்மைக்கென்று, நற்பலி செலுத்தி நின்றனர். பின்வருவாரென எண்ணிக் கொண்டு, பெற்றோர் திரும்பி வந்தனர். என்னிறை மகனோ அறிஞரின் முன்பு, எண்ணா அறிவைத் தந்தனர்! (லூக்கா 2)