வந்தவர் எத்தனை பேரென அறியோம்;

வணங்கி, பொற்பொருள் தருகிறார்.

தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,

தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.

முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,

முழுமையாக நமைத் தருவோம்.

இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;

இனிய புதுவழிப் பேறுறுவோம்!

(மத்தேயு 2)

May be an image of 2 people