எந்த நிலை என்றாலும்!
இறை மொழி: யோவான் 21:18-19.
18. நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
இறை வழி:
எந்நிலை என்பதில் இல்லை;
இயேசுவே எனக்கு எல்லை.
அந்நிலை நோக்கிச் செல்வேன்;
அதுவே வாழ்வெனச் சொல்வேன்.
இந்நிலை அடைந்த முன்னோர்,
இவ்வழி நடந்து சொன்னோர்,
செந்நிலைக் கென்றே அழைத்தார்;
சிலுவை சுமந்துயிர் பிழைத்தார்!
ஆமென்.
