யார் விளித்தாலும் இயேசு சென்று,

இறையிடம் திரும்ப அழைக்கிறார்.

தார் மணி மாலை தற்புகழ் என்று,

தம்பட்டமின்றி உழைக்கிறார்.

பேர் புகழ் பெருமை ஈட்ட இன்று,

பிழைப்போர் திருந்த அழைக்கிறார்.

போர் முகில் அன்று, பொறுமை நன்று;

புரிந்தோர் நன்கு உழைக்கிறார்!

(மத்தேயு 10 & 11).