திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,
தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.
பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,
பெயரில் எசேனி என்றுமிருக்கும்.
மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,
மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.
ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;
இறைமகன் சொல்லே சிறக்கும்!
The Truth Will Make You Free
திருமறை சொல்லா இன்னொரு பிரிவு,
தேடிப் பார்க்க வரலாறுரைக்கும்.
பெருமைகள் துறந்து நோன்புமிருந்து,
பெயரில் எசேனி என்றுமிருக்கும்.
மறுமுறை உயிர்ப்பு நம்பாப் பிரிவு,
மறைந்து ஒடுங்கி தனை மறக்கும்.
ஒருமுறை இறக்க, இருமுறை பிறப்பு;
இறைமகன் சொல்லே சிறக்கும்!
வெறித்தனம் கொண்டது இன்னொரு கூட்டம்;
வீணாய்ப் போனது செலோத்தே கூட்டம்.
பறித்திடும் உரிமை மீட்பதற்கென்று,
பட்டயம் எடுத்து வீழ்ந்த கூட்டம்.
நரித்தனம் கொண்டு ஆடிடும் ஆட்டம்,
நல் முடிவடைய சொல் ஓர் ஆட்டம்?
விரித்திடும் தீமை அழிப்பதற்கென்று,
விண் அளிக்கும் அன்பின் ஆட்டம்!
பலவித தோற்றங்கள் கொடுப்பினும்,
பகிர்ந்திட படங்கள் எடுப்பினும்,
வீண் புகழ்ச்சியை வெறுக்கிறேன்.
இலை மறை காய் எனும் நல்லிறை
எனக்கு அருளிடும் சொல்லுரை,
மலைதனை பெயர்ப்பது, காணுவேன்;
மடியா அன்பினால் பேணுவேன்!
-கெர்சோம் செல்லையா
வாழ்த்துகள்!
இந்திய விடுதலை நாள்
வாழ்த்துகள்!
பஞ்சம் பசி பிணி, பாழாக்குகிற ,
பாரதம் என்று கிடக்காமல்,
கொஞ்சம் கூட குறைவில்லாமல்,
கொழிக்கும் நாடாய் எழுக.
வஞ்சம் வைத்து, பிறரையழிக்கும்,
வல்லமை தேடி நடக்காமல்,
நெஞ்சம் நிரப்பி, வாழ வைக்கும்,
நேரிய நாட்டைத் தொழுக!
-கெர்சோம் செல்லையா.